Tuesday, June 30, 2009

நான் எப்போதும் போல் வெறுமை வளர்க்கிறேன் பெண்ணே
நீ,, நான் காதல்
சந்தித்த ஓர் நேர்கோடு
இன்று புள்ளிகளாய் போனது.
எங்கெல்லாமோ வெற்றிடங்கள்.
எனக்காக பூக்கும் உன் முற்ற செவ்வரத்தை கூட இன்றில்லையே
என்ன செய்தாய்?

என் காதலை போல அதுவும் இறந்து போனதா?
மனசின் ரம்யங்கள்
இன்னும் என்னில் எங்கோ எஞ்சியுள்ளது
ஆனாலும் நீ இல்லை என்ற நிஜம்
என் கணங்களினை பொசுக்கியே போட்டுவிட்டது.

நீ பிரிந்த கணங்களின்
வெறுமை இன்னும் துரத்துகின்றது.
உனக்கான என்பாடல்களில் எதுவுமே
உன்னை சேரவில்லை
என்கின்ற போது
நான் பாடி என்ன பயன்?

இனி எதுவுமில்லை.
உன் முற்றத்தில் மீண்டும்
நட்டுக்கொள்ள எதயாவது தேர்ந்தெடு
ஆனால் அந்த செவ்வரத்தை வேண்டாம்.

என் முற்றம் பற்றி
உனக்கேது கவலை.
நான் எப்போதும் போல் வெறுமை வளர்க்கிறேன் பெண்ணே

1 comment:

பனித்துளி சங்கர் said...

கவிதை அருமை . பகிர்வுக்கு நன்றி