Showing posts with label கிரிக்கட். Show all posts
Showing posts with label கிரிக்கட். Show all posts

Saturday, October 29, 2011

முரளி இன்றி திணறும் இலங்கை…



ஓய்வினை அறிவித்த போது, டெஸ்ட் கிரிக்கட்டில் இனி இலங்கை தடுமாறும் என்று பலர் ஆருடம் கூறினாலும், முரளி இல்லாமல் எங்களால் முடியாதா, அவரின் பங்களிப்பின்றி கூட டெஸ்டில் இலங்கை வெற்றி பெறும் என்று கூறினர். இவ்வாறான மதிப்பீடுகள் அனேகமாக, விளையாட்டு என்பதையும் தாண்டி , முரளியின் சாதனைகளை அவரின் பங்களிப்புகளை குறைத்து மதிப்பிட தூண்டுகின்ற பேச்சுக்களாகவே இருந்தன.

பெரும்பான்மை துவேசிகளுக்கு , தமிழர் ஒருவரில் இலங்கை அணி தங்கி இருப்பதா?> என்ற பொறாமைதான் அதிகமாக இருந்தது. அதையே, இவர் போனால் நாங்கள் தோற்றுவிடுவோமா? என்ற அலட்சியமாக கூட வெளிப்பட்டது.

ஆனால், இன்று டெஸ்ட் போட்டிகளில் இலங்கையின் நிலை, பாய்மரமில்லா படகு போலத்தான். துடுப்பாட்டத்தில் சில வேளைகளில் சொதப்பினாலும் எப்படியோ மீளும் இலங்கை அணி, பந்துவீச்சில் இன்னும் முன்னேறவில்லை. முரளியின் இடம் இன்னும் காலியாகவே இருப்பது அவரின் ஓய்வுக்கு பின்னரான இலங்கை அணியின் டெஸ்ட் போட்டிகளின் முடிவுகளில் இருந்தே தெரியக்கூடியதாக உள்ளது.

10 wickets
Jul 18-22, 2010
drawn
Jul 26-30, 2010
5 wickets
Aug 3-7, 2010
drawn
Nov 15-19, 2010
drawn
Nov 23-27, 2010
drawn
Dec 1-5, 2010
inns & 14 runs
May 26-30, 2011
drawn
Jun 3-7, 2011
drawn
Jun 16-20, 2011
125 runs
Aug 31-Sep 3, 2011
drawn
Sep 8-12, 2011
drawn
Sep 16-20, 2011
drawn
Oct 18-22, 2011
9 wickets
Oct 26-30, 2011
(நன்றி – Cricinfo )

ஜூலை 18 இந்தியாவுடனான முரளியின் இறுதி டெஸ்ட் வெற்றியின் பின்னர், இதுவரை 13 டெஸ்ட்களில் 4 போட்டிகளில் தோற்றுள்ளது . ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.

கடைசியாக இன்று முடிந்த பாகிஸ்தானுடனான போட்டியில், அவர்களை ரன் எடுப்பதில் கட்டுப்படுத்த முடியாமல் இலங்கைப் பந்துவீச்சாளர்கள் திணறினர். பாகிஸ்தானை குறைந்த ரன்களுக்குள் மட்டுப்படுத்த முடிந்திருந்தால், இலங்கை இப்போட்டியினை சமநிலைக்கோ , வெற்றி க்கோ கொண்டு சென்றிருக்கலாம்.

இனி வரும் கால்ங்களிலும் முரளியின் இடம் வெற்றிடமாகவே இருக்குமானால், இலங்கையின் டெஸ்ட் போட்டிகளுக்கான வெற்றிவாய்ப்புகள் குறைந்து செல்லக்கூடிய நிலையே உண்டு. இனவாதம், அரசியல் என அனைத்தையும் தாண்டி திறமைக்கு முன்னுரிமை கொடுத்து, இன்னும் பல திறமைகளை வெளிக்கொணர வேண்டிய அவசியம் இப்போது இலங்கை கிரிக்கட்டுக்கு உண்டு.




Sunday, August 14, 2011

அதென்ன டெஸ்ட் கிரிக்கட்???




நேற்று இந்தியா டெஸ்டிலும் தோற்றுவிட்டது, தனது முதலிடத்தினையும் பறி கொடுத்துவிட்டது.

இன்னிக்கு ஆபிஸ்ல நல்ல அவல்தான், 

மாட்டினீங்கடா மலையாளிகளா! இதோ வர்ரன் என கறுவிக்கொண்டே ஆபிஸ் சென்றேன். 

ஏனிந்த கொலைவெறி என்று நீங்கள் கேட்கலாம். எல்லாம் அவனுகள்ர ஆட்டம்தான், வேல்ட்கப் பறி கொடுத்ததன் பின் இவனுகள் போடும் ஆட்டம் சகிக்க இயலவில்லை. இனி கிரிக்கட்டில் இந்தியாவை எவனாலும் வீழ்த்த முடியாது அது, இது ன்னு வெட்டி ஜம்பம் வேற..

இருங்கடா வர்ரன்,
ஆபீஸ் நுழைந்தால், அனைவரும் வேலையில் படு மும்மூரம். 

காலையிலேயே இவ்வளவு அமைதியா ஒரு நாளும் இருந்ததே இல்லை.
வணக்கம் வைத்தாலும், கொம்ப்யூட்டரை பார்த்துக்கொண்டே பதில் வணக்கம் சொல்றானுகள்.

..ஆஹா, பசங்க முன் ஏற்பாடுகளோடதான் வந்திருக்கானுகள், எப்பிடி ஆரம்பிக்கலாம்? என யோசித்துக் கொண்டே , எப்போதும் சந்தைக் கடை போலவே இருக்கும், விற்பனை பகுதியை பார்த்தால், வெறிச்சோடி கிடந்தது. ஒரே ஒரு பிலிப்பினி மட்டும் கணினியில் லேட்டஸ்ட் கணினி விளையாட்டுக்களை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

“ஹாய்!” என்றவாறு அவனிடம், “ எங்கே மற்றவர்கள் ? “ என வினவினேன், 

அனைத்து தன்மான சிங்கங்களும் தமது வாடிக்கையாளர்களை சந்திக்க போய்விட்டதாக பதில் கிடைத்தது.

அடப்பாவிகளா! காலையில், வெட்டி அரட்டை , அது இது ன்னு பொழுத போக்காட்டி விட்டு 10 மணிக்கு பிறகே , போறதா வேண்டாமா ன்னு யோசிக்கிற பயலுக, இன்னிக்கே காலங்காத்தாலேயே கெளம்பிட்டானுகளே!

சே! சூட்டோட சூடா பசங்கள கடுப்பேத்தலாம்னு பார்த்தா ஒருத்தனும் சிக்கமாட்டான் போலருக்கே! என்ன வாழ்க்கைடா!!! என என்னை நானே நொந்து கொண்டேன்.

“” காலையில் என்ன இந்தப்பக்கம், ஏதாவது விசயம் உண்டா” என்றவாறு என் சிந்தனையினை கலைத்தான் , அங்கிருந்த பிலிப்பினி.

பரவாயில்லை வந்ததுக்கு இவனிடமாவது சொல்லி கொஞ்சம் தேத்திக்குவோம், என்று எண்ணிக்கொண்டே,

“ நேற்று நடந்த டெஸ்ட் கிரிக்கட்ல இன்கிலாந்திடம் இந்தியா தோத்திடுச்சு, உனக்கு தெரியுமா?” என்றேன்.

“ஓ! அப்படியா “ என்றான் வெகு சுவாரசியமாக,

ஆஹா பயல் ரொம்ப சுவாரசியமாகிட்டான், விசயத்த இவனுக்கிட்ட சொல்லி இன்னும் அவனுகள கடுப்பேத்தலாம் எனும் நம்பியார்த்தனத்துடன்,

“உனக்கு தெரியுமா, அவர்கள் டெஸ்ட்டில் தனது முதலிடத்தையும் இழந்து விட்டார்கள்” என்று பூரிப்புடன் மேலும் தொடர எத்தனித்த என்னை குறுக்கிட்டு,

“கொஞ்சம் பொறு, எனக்கு, கிரிக்கட் ஒரு விளையாட்டு என்று தெரியும், அது என்ன டெஸ்ட்?? “ என்றான்.

கடுப்பு இப்போது என்னை தேடி வந்து கொண்டிருந்தது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!!!!!!!!




Sunday, May 30, 2010

இந்தியா வென்று விட்டது : இனி ரெண்டு நாளைக்கு – முடியல……….


உண்மைதான். இவ்வனுபவத்தினை அனேகமான மத்திய கிழக்கில் பணிபுரியும் நண்பர்கள் பெற்றிருப்பீர்கள் என நம்புகின்றேன்.

நான் பணிபுரியும் அலுவலகத்திலும் இந்திய நண்பர்கள் பலர் பணிபுரிகின்றனர். பெரும்பான்மையான நண்பர்களுக்கு – நட்பு என்பது கிரிக்கட் இல்லாத வேளைகளில் மட்டும் என்பது போல எனக்குத்தோன்றும். இந்தியா தோற்று விட்டால், ஏதோ கப்பல் கவிழ்ந்த மாதிரி மூஞ்சி விடியவே விடியாது.அதிலும் இலங்கையுடன் தோற்று விட்டதா? கிழிஞ்சது போ………… ஏதோ பரம விரோதிய பார்ப்பது போல பார்ப்பர்.

“ டேய் அவன் வெண்டா, தோற்றா நான் என்னடா செய்ற வெண்ண..” என கத்த வேண்டும் போல இருக்கும். ம்ம் .. காலக்கொடுமை.. வேற என்னத்த சொல்ற…
“ஏண்டா இப்பிடி இருக்கீங்க” என பரிதாபப்பட்டுக்கொள்வேன்.

எனது நாட்டினரின் நிலை வேறாக இருக்கும். “ இண்டைக்கு இலங்கை தோற்றுவிட்ட்து” என்றால், என்ன மாட்ச் எங்கே நடக்குது என்பர், இவ்வளதுதான் எம்மவர்களின் கிரிக்கட் பற்றிய ஆர்வம். இதையும் விட மிஞ்சி மிஞ்சிப்போனால் – யார் யார் எத்தனை ரன், விக்கட் எனபன பற்றியுடன் முடிந்து விடும்,

தற்போது நடந்து கொண்டிருக்கும் முக்கோண சுற்றுப்போட்டியின் முதல் போட்டிக்கு அடுத்த நாள் அதாவது நேற்று, எங்கள் அலுவலகம் – ஒரு மரண வீடு போல இருந்தது. எனது இந்திய சக பாடிகள் முகம் விடியவில்லை. சிம்பாவேவுடன் இந்தியா தோற்றுவிட்ட்து. இந்திய வீர்ர்கள் அனைவருக்கும் அர்ச்சனை நடந்து கொண்டிருந்த்து. நான் மனதுக்குள் சிரித்துக்கொண்டேன் ( வெளியே சிரித்தால் உரிச்சு தொங்க விட்டுடுவானுக,,,,) வலிய வந்து என்னிடம் – புது டீம், அதான் தோற்றுச்சு.. சேவாக் இல்ல , டோனி இல்ல அது இது என்று ஆயிரம் விளக்கங்கள். இதுக்கு நான் எதுவுமே கேட்க வில்லை. வேணாண்டா அழுதுடுவன் எங்கிற நிலையில் நான்..

இதோ இன்று, மாதக்கடைசி என்றால் எனது தலை உருளும். மேசையில் இருக்கும் கோப்புக்களினை பார்க்கும் போதே வயிறு கலக்கும். அதற்குள் மூழ்கிப்போயிருக்கும் போது, எனது இன்ரகொம் ஒலித்தது. திரையில் எனது இந்திய நண்பர்களில் ஒருவரின் எண் ஒளிர்ந்த்து.

“ஹலோ” இது நான்

“எப்படி இன்னை மேட்ச்?” என அவர் கேட்கும் போதே உற்சாகம் தெறித்த்து.

இலங்கை தோற்றுவிட்டது என்பது நண்பரின் உற்சாகக் கத்தலிலேயே புரிந்துவிட்டது. இந்தியா ஜெயித்தது என்பதை விட எதிரணி தோற்றுவிட்டது என்பதிலேயே அவர்கள் மகிழ்ச்சி அதிகம் இருப்பதை கண்டு வியந்துள்ளேன்.

“வாழ்த்துக்கள்” என்றேன். நண்பர் விடுவதாக இல்லை. போட்டு அறுத்துக்கொண்டே இருந்தார். கேட்டுக்கொண்டே இருந்தேன். 

வை பிளட் … சேம் பிளட் நிலமை….
ஏண்டா இப்பிடி இருக்கீங்க … விடுங்கடா டேய்….
வேறு என்னத்த சொல்ல….

( நண்பர்கள் இதை பாக்கமாட்டாங்க எங்கிற தைரியத்தில்தால் இதை பதிவேற்றுகின்றேன்.. ஏன்னா அவங்க ஒத்தரும் தமிழர்கள் இல்லை…. ஐ ஜாலி!!!!!)