Tuesday, May 17, 2011

வீதிகளின் தேவதைகள் என்னை விரட்டுகின்றார்கள்



அழகான பெண்களினை
எப்போதும் என் கண்கள் தொடர்கின்றன.
அலைகின்ற மனசைக் கூட்டிக்கொண்டு.

வீதிகளில் நிறைகின்ற அழகுகளில்
கண்களும் மனமும் சருகாய் அலைய
நான் மட்டும் வேறாகி

கூர்மையான பார்வைகள்,
கதை பேசும் கண்கள்
மெலிதாய் தெரியும் புன்னகை
என எல்லாம் தேடி
இன்னும் முன்னேறும் மனது-கண்ணின் துணை கொண்டு.

கனவுகளின் தொல்லை முடியாத
சில நடு நிசிப்பொழுதுகளிலும்
வீதிகளின் தேவதைகள்
என்னை விரட்டுகின்றார்கள்


( ஒரு மீள் பதிவு,,,, ஏதாவது கிறுக்கலாம் எனும் ஆசையுடன் )

2 comments:

பனித்துளி சங்கர் said...

கவிதையும் புகைப்படமும் அருமை

குறையொன்றுமில்லை. said...

கவிதை நல்லா வந்திருக்கு. வாழ்த்துக்கள்.