Thursday, January 27, 2011

அம்மழைக்காலம் வராதிருக்க வேண்டுமென……….



நீ எதிர்பார்த்த
நான் எதிர்பார்க்கா,
அது நிகழ்ந்தே போனது….

நீ சென்றே விட்டாய்…
என்னையும் உன் நினைவுகளினையும் விட்டு..
நீ சென்றே விட்டாய்…
இனியும் நீ என்னருகில் இல்லை..

என்றாவது
ஓர் மழைக்காலத்தில்
நீ உன் கணவனையும், நான் என் மனைவியையும்-
அறிமுகப்படுத்தும் துர்ப்பாக்கியம்
“ இவர் என் கிளாஸ்மேட்” எனும் விழுங்கலுடன்-
ஆரம்பிக்கலாம்.

பிரார்த்தித்துக்கொள் பெண்ணே
அம்மழைக்காலம் வராதிருக்க வேண்டுமென……….
__________________

Tuesday, January 18, 2011

பைசாவுக்காக சட்டை துறந்த இந்திய கிரிக்கட் வீரர்கள்

வருகின்ற உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளின் பிரதான அனுசரனையாளர்களில் ஒன்றான பெப்சி விளம்பரத்திற்காக இந்திய கிரிக்கட் அணியின் தலைவர் மற்றும் சில வீரர்கள் வெற்றுடம்போடு தோன்றியுள்ளனர்.

ம்ம்…… பைசா படுத்தும் பாடு……………..

பசங்க மேல கண்ணு வச்சிடாதீங்க... குடும்பக்காரப் பய புள்ளைங்க!!!!!!!!!












Sunday, January 16, 2011

இம்புட்டு வெகுளியாவா இருந்திருக்கோம்!!!!!!!!!!!

காலம் என்பது எபோதும் எதையாவது கற்றுத்தந்து கொண்டே இருக்கின்றது இல்லையா?  அதுவும் கடந்து போன வாழ்க்கையினை திரும்பிபார்க்கின்ற போது, மேலே உள்ள டயலாக் பாதிக்கு மேல் நம்மக்களுக்கு வந்திருக்கும். ஒத்துக்கிறீங்களா? “அனுபவம் என்பது வழுக்கை விழுந்த பின் கிடைக்கும் சீப்பு மாதிரி” என்னு யாரோ ஒரு பெரிசு சொன்னது எத்தின உண்மை.

மனிசனோட மனிசனா பழக - எத்தின முகமூடி தேவை அதுவும் எந்த இடத்துக்கு எந்த முகமூடி, முன்ன உள்ளவன் என்ன முகமூடியோட இருக்கான். அவனோட எண்ணம் என்ன ஏன் அவன் அதைப்பற்றி சொல்றான். அவன் கதைப்பது நெசமா…………………….ஐயோ!! ஐயோ!!!! முடியலடா சாமி.. இதுக்குள்ள இம்புட்டு மேட்டர் இருக்கா என்னு நெனச்சா மலைப்பா இருக்கு. ஆனா அந்த கெரகமும் இப்பதான் நம்ம மண்டைக்கு ஒறைக்குது.

இம்புட்டு நாளா, நாம நெனைக்கிற மாதிரித்தான் நம்ம கூட இருப்பவங்களும் நெனைப்பாங்க.. நாம எத நெனைச்சு சொல்றோமோ அத அவங்களும் புரிஞ்ச்சிப்பாங்க… எல்லாரும் நல்லவய்ங்கதான் என்னுதான் காலம் தள்ளியிருக்கம்.. என்னா ஒரு வெகுளித்தனம்………யப்பா!!!!!!! அப்ப, நமக்கு எது நடந்தாலும், அது என்னவோ போகட்டும்னு லூஸ்ல வீட்டுர்ரது. இது ஏன் நடக்குது? காரணம் என்னா என்னு ஆராய்ற அளவுக்கு புத்தி பத்தல. ஏன்னு புரியல, திடீரென இப்ப கண்ண முழிச்சா, ஒரே களவாணிப்பய சவகாசமால்ல இருக்கு.

பொறவு, எல்லாத்தையும் ரீவைன்டு போட்டா, மேட்டர் வேற! அட! ஆமாங்க, நாமதான் லேட்டு. எதுக்கு களவாணி ஆவுறதுல. அம்புட்டு பய புள்ளைகளும் பீ ஹெச் டி லெவல்ல இருக்கானுவோ.. ஆத்தாடி.. இருங்கடா இதோ எழும்பிட்டன் வர்ரன்!!!!!!!!!!!!!!

( டிஸ்கி : இதற்கும் பதிவுலகுக்கும் எந்த லிங்கும் இல்ல மக்கா....இது கதையல்ல நெசம் ஆனா இங்க இல்ல)


Thursday, January 13, 2011

கடிதங்களினையும் காக்கைகளினையும் தின்ற தொலைபேசிகள்


96, 97 களில் கூட தகவல் தொழில் நுட்பம் மனிதர்களை ஆளத் தொடங்கவில்லை. ஒரு வீட்டில் தொலை பேசி இருக்கின்றது என்பதே – ஒரு வகையான பணக்காரத்தனத்தின் குறியீடு போலத்தான் பார்க்கப்பட்டது. தொலைபேசிக்கான தேவைகள் அப்போது அவ்வளவாக வலியுறுத்தப்படவில்லை. அவசரம் என்றால், தந்தி. அல்லது கடிதம். இதையும் தாண்டினால்த்தான் தொலைபேசி. 

தொலைபேசினால் அது பற்றிய கதையாடல்கள் குடும்பம் பூராகவும் ஓரிரண்டு வாரங்களுக்கு உலா வரும். அதோடு அது ஒரு ஆடம்பரம் எனும் தோற்றப்பாடும், பெருமையாகவும் வர்ணிக்கப்படுவதுண்டு.

தொலைதூர உறவுகளுக்கிடையிலான பாலமாக- கடிதங்களே பயணப்பட்டன. அவற்றை எதிர்பார்த்து காத்திருக்கும் நாட்கள் ஒரு வித பரபரப்புடன் கழியும். உறவுகளின் கடிதம் தவிர வேறு எந்த ஒரு தொடர்புகளும் இல்லை. அவர்களின் கடிதம் மட்டுமே, அவர் அங்கு இன்னும் இருக்கின்றார் என்பதற்கான ஒரே சாட்சி என்பதை இப்போது எண்ணிப்பாருங்கள்- அதில் ஒரு அசாத்தியம் அல்லது அசாதரணம் தொக்குகின்றதல்லவா?? ஆனால், இற்றைக்கு 10 வருடங்களுக்கு முன்பு வரை அப்படித்தான் வாழ்ந்திருக்கின்றோம். அக்காலங்களில் தூர உறவுகளின் அருமை, உறவின் வலிமை என்பன மிக்க உறுதியாக இருந்திருக்கின்றது. இன்று அது கொஞ்சம் குறைவு போல எனக்குத் தோன்றுகின்றது.

கணவனின் கடிதம் காண, காகத்திடம் விவரம் கேட்கும் மனைவி. தபால்காரனை எங்கு கண்டாலும் மகனின் கடிதம் கேட்கும் தந்தை என அனைத்தும் வலிதான உறவொன்றினையே வேண்டி நின்றன.

இன்று நிலமை மாறிவிட்டது. வீட்டிற்குள் அலைபேசிகள், இணையம் என உலகம் சுருங்கிப்போய்விட்டது. முகம் பார்த்து கதக்கின்றனர். நினைத்த மாத்திரத்தில் தொடர்பினை ஏற்படுத்த முடிகின்றது. தொலைதூரம் என்பது இப்போது போலியாகிவிட்டது. நவீன தகவல் தொழில்நுட்பம் அனைத்தையும் சுருக்கிவிட்டது. அதனால் இப்போது கடிதங்களுக்கோ, காகங்களுக்கோ வேலை இன்றிப்போய்விட்டது.

இதை ஒரு வகையில் நன்மை என நோக்கினாலும், கடிதம் எதிர்பார்த்து, எழுத்தில் உறவுகளின் முகம் பார்த்து, நினைவுகள் தோன்றும் போது மீண்டும் மீண்டும் … என .. இப்படியான சுவாரசியங்கள் இன்றைய நவீனத்தில் இல்லாமல் போய் விட்டது. ஒலியினை விட வார்த்தைகளுக்குள்ள வீரியத்தினை இன்றைய நவீனம் கபளீகரம் செய்து விட்டது.




Wednesday, January 12, 2011

மிதக்கும் கிழக்கிலங்கை...

மழை என்றால்... வானம் பொத்துவிட்டதோ என எண்ணும் அளவிற்குள்ளதாம்... இன்னும் ஊற்றிக்கொண்டே இருக்கின்றது. சாட்சிக்காக சில படங்கள்..



திடீர் நதி...



இங்க வடிகான் இருந்திச்சே எங்க போச்சு!!!!!!!!!!!!!!!!



எங்க ஊரும் இப்ப வெனிஸ்தான்..... ஆனா நாங்க படகெல்லாம் விடமாட்டோம் ...



எல்லாத்தையும் இப்பவே கழுவிக்கங்கப்பா, மழை காசு ஒன்னும் கேக்காது...




அழையா விருந்தாளி.. கதவை அடைச்சாலும், ச்சும்மா பூந்து புறப்படுவோமில்ல!!!!


அப்பா!!!!!!!! படகு வாங்கியாச்சு... விடு ஜூட்........


ஹய்யா ஸ்கூல் லீவு... ஆனா எங்கும் போக முடியா...


மழைய நிறுத்தச் சொல்லி சாமிய வேண்டப் போனா...!!!!!!!!!!!



இயற்கையும் துரத்துகின்றதே.. 


நண்பர்களே! இது உங்கள் பார்வைக்காக, இயலுமானவர்கள், முடிந்தவகையில் தங்களது பங்களிப்பினை வழங்கலாம்.


இலங்கைப் பதிவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை மேற்கொள்ளும் முஸ்தீபுகளில் இறங்கியுள்ளார்கள். அவர்களின் கரங்களை பலப்படுத்துவோம், ஆகக்குறைந்தது பிரார்த்தனைகளிலாவது.

Monday, January 10, 2011

ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!!

வார்த்தைகள் வழுக்கிச் செல்கின்றன
எதிலாவது ஒட்டிக்கொள்ள கட்டளையிட்டும்..
துயரத்தின் வழிகளில் எப்போதும் போல்

*******

இறுதிக்கணங்கள் எப்போதும் சுவாரசியமானவை
உன் தொலைபேசி அழைப்பிலும்,
முத்தமொன்றின் அவசரத்திலும்
ஏன் மௌனங்களின் இறுதி கூட,
என் மரணம் பற்றிய கனவும் அதுவாகவே சபிக்கப்படட்டும்..

********

உன்னை துதிப்பதில்லை எனும் முடிவு பற்றி
நான் பிரகடனம் செய்த மறுகணம்-
நீ தொடர்ந்தாய்
துதிப்பது உன் கடமை என்பதை ஞாபகமூட்ட..


Saturday, January 08, 2011

IPL 4 : விலை போன வீரர்களும், விலை போகா சரக்குகளும்


IPL 4 ற்கான வீரர்கள் ஏலம் ஜரூராக ஆரம்பித்துவிட்டது. ஏதோ பண்டம் பாத்திரம் வாங்குவது போல மனிதர்கள் ஏலம் விடப்படுவது சிரிப்பை வரவைத்தாலும் கொடுக்கப்படும் விலையினை பார்க்கின்ற போது.. யப்பா!!!!!!!!!!!!!!!!!!!!!! இதோ வீரர்களினை வாங்கிய அணியும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட விலையும். ( டொலரில் உள்ளதை பெருக்கி பார்த்துக்கோங்கோ மக்களே! இதய பலவீனம் உள்ளவர்கள் முயற்சிக்க வேண்டாம்… )) )

முதலில் ஏலம் விடப்பட்ட வீரர் Gambhir பலத்த போட்டியின் மத்தியில் Kolkata அணி $2.4 மில்லியன் டொலர்களுக்கு வாங்கியது தற்போதுள்ளதன் படி இதுவே அதி கூடிய ஏலத்தொகையாகவும் உள்ளது.

சென்ற முறை வெற்றிகரமாக சொதப்பிய Dilshan இம்முறை Bangalore அணியினால் 650,000 டொலர்களுக்கு வாங்கப்பட்டுள்ளார. அதோடு Zaheer Khan ம் அதே அணிக்காக $900,000 ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து நியூசிலாந்தின் துடுப்பாட்ட வீரர் Ross Taylor Rajasthan Royal அணியினால் $1 million விலை நிர்ணயிக்கப்பட்டு ஏலம் எடுக்கப்பட்டார்..

அதிரடி துடுப்பாட்ட வீரர் Yusuf Pathan க்கான ஏலம் அனைத்து அணிக்கிடையிலும் பெரும் போட்டியாக இருந்தது. அனைத்து அணியும் அவரை வாங்குவதில் மும்மூரம் காட்டின. ஆனால் இறுதியில் அவரை $2.1 million dollars கொடுத்து  Kolkata பெற்றுக்கொண்டது. இது இன்றைய ஏலத்தில் இரண்டாவது பெரிய தொகையாகும். அதோடு இவரது சகோதரர் Irfan Pathan னை வாங்குவதிலும் பெரும் போட்டி நிலவியது. இறுதியில் Irfan Pathan ஐ டெல்லி அணி $1.9 million dollars கொடுத்துப் பெற்றுகொண்டது. பதான் சகோதரர்கள் காட்டில் இம்முறை அடை மழைதான்!!! இருவருக்கும் சேர்த்து 4 மில்லியன் டொலர்கள்…

இங்கிலாந்தின் Kevin Pietersen, $650,000 களுக்கு Deccan Chargers னால் ஏலம் எடுக்கப்பட்டார்.

அதன் பின் இலங்கையின் Mahela Jayawardene , IPL ல் புதிதாக இணைந்துள்ள Kochi அணியினால் $1.5 million dollars களுக்கு ஏலம் எடுக்கப்பட்டார் இவர் சென்ற முறை ஏலத்தில் 475,000$ களுக்கு ஏலம் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகமாக தற்போது ஆடுகளங்களில் சொதப்பி வந்தாலும் Yuvraj Singh ற்கான ஏலம் ரொம்ப சூடாகவே இருந்தது. புதிதாக IPL இல் இணைந்துள்ள Pune அணி அவரை $1.8 million dollars களுக்கு வாங்கியது.

தென்னாபிரிக்காவின் AB de Villiers $1.1 million dollars, களுக்கு Bangalore அணியினால் வாங்கப்பட்டார்.

அதன் பின் இன்று முதல் ஆஸ்திரேலியா வீரராக ஏலம் விடப்பட்ட வீரர் Cameron White  $ 1.1 million dollars களுக்காக Deccan Chargers அணிக்காக வாங்கப்பட்டார்.

தென்னாபிரிக்காவின் சகல துறை வீரர் Kallis, Kolkata அணியினால் 1.1 million dollars களுக்கு வாங்கப்பட்டார்.

இந்தியாவின் அதிரடி வீரர் Rohit Sharma வுக்கான ஏலமும் இம்முறை மிக்க போட்டியாக இருந்தது. அவரை ஏலம் எடுப்பதில் சென்னையும் மும்பையும் இறுதிவரை போட்டியிட்டு, இறுதியாக மும்பை அதில் வென்றது. அவருக்கு கொடுக்கப்பட்ட விலை $2 million dollars.

இம்முறை Andrew Symonds ம் சர்ச்சை நாயகன் ஹர்பஜனும் ஒரே அணியில் விளயாடும் நிலை தோன்றியுள்ளது. ஆமாம்! Andrew Symonds ஐயும் Mumbai Indians  $850,000 களுக்கு வாங்கியுள்ளது. ஏதாவது பத்திக்குமா என்று பார்க்கலாம்!!

இலங்கை அணியின் தலைவரும் பஞ்சாம் அணியின் தலைவருமான Kumar Sangakkara,  $700,000 களுக்கு Deccan Chargers னால் ஏலம் எடுக்கப்பட்டார். சென்ற முறை டெக்கானின் அணித்தலைவரான Adam Gilchrist, இம்முறை Punjab அணியினால் $900,000 களுக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இரு அணித்தலைவர்களும் பரஸ்பரம் அடுத்த அணிக்காக விளாஇயாட வேண்டியவாறு IPL 4 மாறியுள்ளதும் ஒரு சுவாரசியமான நிகழ்வாக உள்ளது. இது இன்றைய ஏலத்தில் முதன் முதலாக பஞ்சாப் அணியினால் மேற்கொள்ளப்பட்ட ஏலமாகும்.

Rahul Dravid Rajasthan Royals னால் $500,000 களுக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அவரது முன்பய அணியான Bangaloreனாணி அவரை ஏலம் எடுப்பதில் எந்த ஒரு அக்கறையினையும் எடுக்கவில்லை.

Pune அணி, தென்னாபிரிக்க அணித்தலைவர் Graeme Smith னை  $500,000 களுக்கு ஏலத்தில் பெற்றது அதோடு புனே அணி அதிரடிக்கு பேர் போன Robin Uthappa வினை பலத்த போட்டிக்கு மத்தியில் $ 2.1 million தொஅகைக்கு ஏலத்தில் பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்க அணியின் T20 தலைவர் Johan Botha Rajasthan Royals அணியினால்  $950,000 க்கு வாங்கப்பட்டார்.

இந்திய டெஸ்ட் அணியின் தூண் VVS Laxman க்கு அணிகளுக்கிடையே அவ்வளவாக வரவேற்பு இருக்கவில்லை. Kochi அணி அவரை ஆரம்ப தொகையான $400,000 களுக்கு எந்த ஒரு போட்டியும் இன்றி எடுத்துக்கொண்டது.

நியூசிலாந்து அணியின் தலைவர் Vettori னை வாங்குவதில் Pune க்கும்  Bangalore க்கும் இடையில் பலத்த போட்டி இருந்தது இறுதியில் பெங்களூர் $550,000 களுக்கு அவரை வாங்கியது. Vettori ன் சக வீரரான, அதிரடி வீரர் McCullum ற்கும் இம்முறை அவ்வளவாக வரவேற்பு இருக்கவில்லை. $475,000 மாத்திரம் Kochi அவரை வாங்கியது.

சொந்த ஊர்க்காரரான சிறிசாந்த் இனை வாங்குவதில் Kochi அணி வெற்றி பெற்றது. $900,000 கள் அவருக்கான விலையாக நிர்ணயிக்கப்பட்டு அவரை சொந்த மாநில அணி பெற்றுக் கொண்டது.அதோடு மற்றொரு பந்து வீச்சாளரான RP Singh னையும் Kochi அணி $500,000 களுக்கு பெற்றுக்கொண்டது.

விலைபோக வீரர்கள்

முன்னாள் கொல்கத்தா அணித்தலைவர் Sourav Ganguly னை எந்த ஒரு அணியும் வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. இது அனைவராலும் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் மேற்கிந்திய அதிரடி நாயகன் Chris Gayle க்குக்கூட இதே நிலை ஏற்பட்டது அனைவராலும் ஆச்சரியத்துடன் நோக்கப்படுகின்றது. தற்போது கெயில் சரியான போமில் இல்லை என்ற காரணத்துடன், மேற்கிந்திய கிரிக்கட் சபையுடனான முறுகல் கூட இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

ஏலம் தொடர்கின்றது...........................



Tuesday, January 04, 2011

ஒரு ரூபாய்


பாடசாலைக் கால மதிய உணவு.
நண்பர்களிடையே பணக்கார அடையாளம்
பக்கத்துக்கடை ஐஸ்பழம்
அடித்துவிட்டு அப்பா தரும் அன்பு.
முத்தம் வாங்க தாத்தா தரும் லஞ்சம்.
பெருநாட் காலங்களில் நிகழும் அற்புதம்
கடைக்குச் செல்ல கிடைக்கும் போக்குவரத்துக்கூலி
இன்று,
நினைவுகள் மீட்கும் ஞாபகச் சின்னம்