Tuesday, November 30, 2010

வாழ்க்கையின் பயங்கள்




இருட்டோடு கலக்கின்றது என் கருமையும்
எதற்காக ஒளிய எத்தனிக்கின்றேன்?
இன்னும் புரியவில்லை.
நான் ஒரு கொலைகாரனா?
பாவியா? கோழையா?
எட்டாத தூரத்தில் எங்கோ ஒட்டி நிற்கும் வான் நோக்கும்
என் வினாக்களுக்கு அர்த்தம் இல்லை.
இன்னும் – பயங்கள் மட்டும் ஒட்டிக்கொள்ள
மீண்டும்,
ஒளிய எத்தனிக்கின்றேன்.
வாழ்க்கையின் புதிர்களுக்கு என்னிடம் விடையில்லை.
தேடும் எத்தனிப்புகள் பற்றிய கவலை இன்னும் தோன்றாமல்,


Monday, November 22, 2010

பலதும் பத்தும் - III

தமிழ்மன்றில் பாரதி என்ற புனைப்பெயரில் எழுதி வரும் முருக பூபதி அண்ணாவினை சந்தித்தேன். எவ்வளவு இனிமையன மனிதர்! எளிமையான அர்த்தமாக பேசுகின்ற விடயங்கள் இன்னும் அவரோடு பேச வேண்டும் என்று தோன்றியது. விருந்தோம்பலில் கூட மனிதர் எவ்வளவு அக்கறை. கொஞ்சம் சுகவீனத்துடன் இருந்தேன். கூடவே கூட்டிச்சென்று மருந்து வாங்கித்தந்த்திலிருந்து ( பங்கஜ கஸ்தூரி.. ) சங்கீத சைவ உணவகத்தில் பஞ்சாபி “தாலி”  சாப்பிட்டது வரை. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரே நாளில் முதல் அறிமுகத்தில் இவ்வளவு விருந்தோம்பலோடு கவனிக்க முடியுமா? இன்னும் நான் அவரின் கவனிப்புக்களில் இருந்து விலகவில்லை. பிரியாவிடை பெற்று அறைக்கு வந்து சேருமுன் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டேனா என அழைத்துக் கேட்டதில் இருந்த அக்கறை!  அண்ணா! அண்மையில் என்னை வியக்க வைத்த மனிதர்களில் நீங்கள்தான் பெஸ்ட். இப்படி ஒரு உறவினை ஏற்படுத்தித் தந்த மன்றிற்கு மீண்டும் ஒரு சல்யூட்.

nick vujicic என்ற மனிதர் பற்றிய வீடியோ ஒன்றினை காண நேர்ந்தது. கொஞ்ச நேரம் உறைந்து போய் உட்கார்ந்து விட்டேன். நாம் எந்தளவு அவநம்பிக்கையுடன் இருக்கின்றோம் என்பதை எண்ணும் போது வெட்கமாக இருந்தது. கைகளோ காலோ இல்லாத அந்த மனிதரின் தன்னம்பிக்கை மலைக்க வைக்கின்றது. பார்த்து முடிந்த பின் உலகில் முடியாது என்பது எதுவுமில்லை என்று எனக்கு தோன்றியது. நிச்சயமாக உங்களுக்கும் தோன்றும் இவ்வாறான மனிதர்களால்தான் கொஞ்சமாவது தன்னம்பிக்கை பிறக்கின்றது.


இலங்கையில் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம்களின் உரிமைகள், அவர்களது பிரச்சினைகளினை தீர்ப்பதற்காக ( ??? !@#@ ) ஆளுங்கட்சிக்கு தாவியுள்ளதொடு அமைச்சுப் பதவிகளினையும் பெற்றுள்ளது. இனி இலங்கை முஸ்லிம்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். போனமுறை மாறும் போதும் இதைத்தானே சொன்னார்கள் என திருப்பிக் கேட்க்ககூடாது..  அது போன மாசம்.. இது இந்த மாசம்..

புத்தகங்கள் பற்றி யாருக்கு தெரியும்/ கழுதைகள் அறியாதல்லவா? அதுதான் ஒரு முறை நடந்தது. மத்தியகிழக்கு நாடுகளின் பிரம்மச்சாரிகளின் ஒட்டுக்குடித்தன வாழ்க்கை பற்றி சொல்லத்தேவை இல்லை. அப்படி ஒரு அறையில் வசிக்கும் நண்பர் ஒருவரின் பெருமதி மிக்க புத்தகங்களினை, அறையில் வசிக்கும் இன்னொரு வெங்காயம் அறையினை சுத்தம் செய்கின்றேன் பேர்வழி என அள்ளி குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டது. தனக்கு சொந்தமில்லா பொருட்களை எதற்கு நாம் சீண்டுவான் என்ற பொதுப்புத்தி அற்று அனைத்து நூற்களும் குப்பைத் தொட்டிக்குச் சென்றுவிட்டன. எப்படி ஆத்திரம் வரும். ஆனாலும் எதுவும் செய்யமுடியாது! குப்பைத் தொட்டிக்குள்ளும் அவை இல்லை. யாரோ எடுத்துச்சென்றுவிட்டார்கள். ஒரு பகலின் அரைவாசியினை அக்குப்பைத்தொட்டி அருகே கழித்தும் அந்நூற்கள் கிடைக்கவில்லை. கழுதைகள் அறியாது நூற்களின் அருமை பற்றி..

வீதிக்கடவைகளினை கடக்க முயலும் போது, வாகன ஓட்டுனர்களின் பிரதிபலிப்புகளினை கவனிப்பது இப்போது எனக்கு ஒரு பழக்கமாக தொற்றிக்கொண்டுவிட்டது. சிரிப்பாக இருக்கின்றதா? இல்லை உண்மையாகத்தான் சொல்கின்றேன். மிக சுவாரசியமாக இருக்கும். சிலர், வாகனத்தினை மெதுவாக நிறுத்தி மிக்க பணிவாக கைகளினை உயர்த்தி காட்டுவர். அவர்களுக்கு நாமும் ஒரு புன்னகையோ , சிறு கையசைப்போ செய்துவிட்டு செல்வேன். சில நாட்களில் காலையில் இவ்வாறான நிகழ்வு நடக்கின்ற போது அன்றைய நாளே மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்வேன். இன்னும் சிலர், ஏதோ மந்தைகளை நோக்குவது போல கைகளினை அசைப்பர். முகத்தில் தெரியும் அலட்சியம், அவசரம், வீதியினை கடக்கும் பாதசாரிகள் ஏதோ அற்பங்கள் என நோக்குவது போல இருக்கும். அன்றொருநாள் , ஒரு பிலிப்பினி காரின் உள்ளிருந்து எதோ ஆடு மாடுகளினை விரட்டுவது போல கையினை அசைத்துக் கொண்டிருந்தான் முகம் விகாரமாக இருந்தது. அவனைப்பார்க்கும் போது எரிச்சலாக இருந்தது. இறங்கி வரமாட்டான் என்று உறுதி செய்து கொண்டே, பாதையினைக் கடக்கும் போது நடுவிரலை உயர்த்திக்காட்டிவிட்டு வந்தேன்… ஹா…..ஹா…….   



Sunday, November 21, 2010

அம்பானியின் ஆடம்பர மாளிகை

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஸ் அம்பானி. தனக்கென ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 27 மாடிகளினை கொண்ட ஆடம்பர மாளிகையினை கட்டி முடித்துள்ளார். வரலாற்றில் தனிநபர் ஒருவர் கட்டிய அதிக செலவு மிக்க வாசஸ்தலம் இதுதானாம் ( ம்ம்….. ) அவரது குடும்பத்தில் உள்ள ஆறு பேர் வசிப்பதற்கான இவ்வீட்டினை கட்டி முடிக்க 7 ஆண்டுகள் எடுத்துள்ளன.

சாதாரண கட்டிடங்களினை பொறுத்தவரையில் 60 மாடிகளினை கட்டக்கூடிய உயரம் கொண்ட்தாக இம்மாளிகை இருந்தாலும், கூரைகளிஅனி உயர்த்தி 27 மாட்கள் கொண்டதாக இது கட்டுப்பட்டுள்ளது. மொத்த பரப்பு 37,000 சதுர மீற்றர்கள் !!!

ஒவ்வொரு அறைகளும் பிரத்தியேகமான  அலங்காரம் மற்றும் வசதிகளுடன் காணப்படுகின்றனவாம். 9 லிப்ட்கள்  மற்றும், உடற்பயிற்சிக்கூடங்கள் விருந்தினர் அறைகள் என அனைத்து வசதிகளும் உள்ளதோடு, முதல் மூன்று மாடிகளும் கார்கள் நிறுத்தி வைப்பதற்கான வசதிகளை கொண்டுள்ளதோடு, மேல்தளம் மூன்று உலங்கு வானூர்திகள் தரை இறங்குவதற்கான தளத்தினை கொண்ட்தாகவும் இருக்கின்றது.

அதோடு, அம்பானி மற்றும் அவரது மனைவி மூன்று குழந்தைகள் அதோடு அவரது தாயர் ஆகிய அறுவருக்கும் பணிக்கென இப்புதிய மாளிகையில் 600 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் சொல்கின்றன.

ம்ம்ம்…. பல்லிருக்கிறவன் பக்கோடா திங்கான்.. நமக்கென்ன????















Thursday, November 18, 2010

உன் மறதிகளுக்கு என் வாழ்த்துக்கள்


எழுத எண்ணும் எதுவும் தாள்களில் ஒட்டாமல் தூர நிற்கின்றன.
உன் நினைவுகள் போல,

நலமாய் இருக்கும் உன்னிடம் மிண்டு கேட்க எதுவும் இல்லை
இருந்தும் கேட்கின்றேன் – என் தொல்லைகள் இன்றி சுகமாய் இருக்கின்றாயா?
சுவர்க்கோழிகள் கூவும் இரவொன்றில், உன் நினவுகள் என்னைத் தட்டி எழுப்பிற்று.
பெரும் பிரயத்தனங்களுடன் உன் பிம்பம் தேடி கண்களினை இறுக மூடியும்,
எம் காதலின் இறுதி ஊர்வலம் மட்டுமே மீண்டெழுகின்றது.

சொல்ல வேறொன்றுமில்லை,
உன் மறதிகளினை வாழ்த்துவதை தவிர!


பதிவுலகில் காப்பி பேஸ்ட் கலகங்கள்


பதிவரசியல் எங்கிறாங்க.. காப்பி –பேஸ்ட் எங்கிறாங்க! எதுவுமே புரியல! இருந்தும் ஏதோ எனக்கு தோண்றத சொல்றன். பெரியவுங்க தப்பா இருந்தா சொல்லுங்கோ. இந்த சிறுவன மன்னிச்சிடுங்கோ!!

ங்கில தளங்களில் உள்ளதை மொழிமாற்றி தமிழில் வெளியிடுவது தொடர்பான ஒரு சர்ச்சை தற்போது தமிழ் பதிவர்களிடையே தோன்றியுள்ளது. இது பற்றிய எனது கருத்துக்க்ளை பதியலாம் என எண்ணுகின்றேன். தகவல்கள் கடத்தப்பட மொழி ஊடகமாக் இருக்கின்றது. இங்கு தகவல் தகவலினை கொண்டு சேர்ப்பவரும் ( வழங்கி ) அதைப்பெறுபவரும் ஒத்த அலைவரிசையில் இருக்கும் பட்சத்திலேயே அந்த செயன்முறை பூர்த்தி அடைகின்றது / வெற்றி பெறுகின்றது. இங்கு ஒத்த அலைவரிசை என்பது என்னைப்பொறுத்த வரையில் மொழி. அது தெளிவு. ஆகவே கிடைக்கும் தகவல்களினை மற்றவர்களும் பயன்படும் நோக்கில் பொதுவான ஒரு அலைவரிசை ஊடாக மற்றவர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் தவறு எதும் இருப்பதாக தெரியவில்லை. ஏன் எனில் தாய்மொழியில் ஒரு விடயத்தினை விளங்குகின்ற / கிரகிக்கின்ற வேகம், ஏனைய இரண்டாம் மொழிகள் மூலம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும்.

அந்த வகையில் பதிவர் சசி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எனக்கு தனிப்பட்ட ரீதியில் எந்த ஒரு உடன்பாடும் இல்லை. பதிவுகளினைஇடுவதில் ஒவொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் உண்டு. சிலர் சமூக ரீதியான விடயங்களை  தொடுகின்றனர். சிலர் நகைச்சுவை, இன்னும் அனுபவம், விளையாட்டு என பல. அந்த வகையில் தொழில் நுட்ப ரீதியான விடயங்களை இலகுவாக்கி தருவதில் பதிவர் சசியின் வலைப்பூ மிக உதவியாக உள்ளது. அவர் சொல்வது போல தொழில்நுட்ப விடயங்களினை புதிதாக கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும் என்றால் நடக்க கூடிய சாத்தியமா? இல்லவே!!

ஆனால், மறுதலையாக இந்த காப்பி – பேஸ்ட் ஒருவரின் இலக்கிய படைப்பு தொடர்பில் நடைபெறுவது மன்னிக்க முடியாத ஒன்றாகிவிடும். ஏனெனில் அது ஒருவரின் படைப்பு அதற்கு உரிமை கொண்டாடக்குட்டியவர் உரிய படைப்பாளி தவிர்த்து யாருமில்லையே! எனவே அவரி சிந்தனையை / எண்ணங்களினை அனுமதியின்றி இன்னொருவர் பயன்படுத்த முனைவது மிக கீழ்த்தரமான விடயம். சிந்தனை வரட்சி வந்துவிட்டால் எழுதுவதை நிறுத்தலாம். அதையும் மீறி எழுத வேண்டும் என்ற பிடிவாதம் இருந்தால், தனது குறைகளினை நிவர்த்தி செய்து பின் தனது முயற்சியில் எழுத முயல வேண்டும். அது மொக்கையோ, சப்பையோ அது பற்றிய தீர்ப்பினை ஏனையோரிடம் விட்டுவிட வேண்டும். ஒரு நாளும் பிறந்த குழந்தை உடனே எழுந்து நடந்துவிடுவதில்லை அல்லவா?

ஆகவே நண்பர்காள்! பிணக்குகள் மறப்போம்.. ப்ரியம் வளர்ப்போம்.

ஏதாவது தப்பா இருந்தா மன்னிச்சூ…………………..



Sunday, November 14, 2010

இனித்த பெருநாட்கள்



இன்னும் பசுமைகள் நிறைந்தே உள்ளன
பெருநாட்களின் நினைவுகளில்,
அதிகாலை தொடங்கும் குளியலுடன்,
தொட்டுத்தொட்டே தேய்ந்த புத்தாடைகள் சரசரக்க
மருதாணிக் கைகளுடன் அம்மா தரும் பட்சணங்கள் பெருநாளை வாசமாக்கும்.
புதிய பத்து ரூபாய் நோட்டொன்று அப்பாவிடமிருந்து
அடுத்த கணம் முதல் உலகில் நாந்தான் பணக்காரன்.
ஊதல்கள் தேடி, துபாக்கிகள் தேடி கடைத்தெருக்களில் கால்கள் அலையும்
கூடவே பத்து ரூபாயின் பெருமை சொல்லி..
பகல் உணவு – மகிழ்வுடனும் வீட்டுச்சேவல் பிரிந்த சோகத்துடனும் முடிய
மாமா வீடு தேடி ஓடுவோம் – இன்னொரு பத்து
இறுதியில் அதுவும் சர்பத், சாக்லேட் என முடிந்து போக…
கைகள் வெறுமையாக மனசு வழியும் மகிழ்வோடு, 
மறுநாள் பாடசாலை செல்வோம் பை நிறைய பெருநாள் கதைகளோடு..


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள்!!

Saturday, November 13, 2010

நுண்ணிய உணர்வினை கிளறிவிடும் Vodofone விளம்பரங்கள்

இன்னைக்கு ஒரு விளம்பரம் பார்க்க கிடைத்தது. Vodofone ன் புதிய விளம்பரம்… கொஞ்ச நேரம் பாடசாலைக்காலங்களினையும் பழைய நட்புக்களையும் மீட்டிப்பார்க்க வைத்தது… ஒரு நிமிடத்திற்குள் ஒரு சிறுகதை போல முடிகின்ற அது இன்னும் ஒரு வித உற்சாகத்தை தந்து கொண்டே இருப்பது போல ஒரு உணர்வு/

பாடசாலைக்காலங்களில் ஏற்படும் நட்பு வட்டங்களில் விசேடமாக ஒருவன் மட்டும் நம்மில் மிக்க அக்கறையோடு இருப்பான்.. வகுப்பறையில் பக்கத்தில் இடம் பிடித்து வைப்பது, காக்கா கடி , விளையாடும் போது ஏதாவது சண்டைகளில் சப்போர்ட் என எப்போதும் அந்த ஈர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். முக்கியமாக நடைபெறும் கேங்க் வார்கள் பாடசாலைகளில் ரொம்ப முக்கிய அம்சம். சுவாரசியம்தான்.

உண்மையில் நம்மை ஒருவர் முக்கியத்துவப்படுத்துகின்றார் எனும் போது ஏற்படுகின்ற மகிழ்ச்சி எல்லோரும் வேண்டி நிற்கும் ஒன்று. அந்த உணர்வினை மிக குறுகிய நேரத்துள் ஒரு சிறு கதைக்கான நேர்த்தியுடன் படமாக்கியீருக்கும் விதம் அழகு. நீங்களும் பார்த்து மகிழுங்கள்....





அலுவலக அரசியல் : இருக்கு ஆனா இல்ல!!!!!!!!!!



பலர் மேற்சொன்ன அரசியலுக்குள் அகப்பட்டிருக்கலாம், ஏன் அதை நடத்திக்கொண்டே இருக்கலாம். என் பங்கிற்கு சும்மா ஒரு பதிவு.
உண்மையில் அரசியலுக்கு என்ன அர்த்தம் என்று எனக்கு தெரியாது. ஆனால் இப்போதுள்ள நிலையில் ஒன்று மட்டும் புரிகின்றது- அரசியல் என்றால் முகஸ்துதி செய்து கொண்டே பின்னுக்கு குழி பறிப்பது. ஓரளவு ஒத்துப்போகின்றதா?? அதோடு , தன்னை மட்டும் முன்னிறுத்த பிறரை பூச்சியமாக்கும் நடவடிக்கையும் அரசியல்தான். ஒத்துக்கொள்கின்றீர்களா?? இந்த விளக்கங்களை வைத்து தனி மனித நடவடிக்கைகளினை ஓரளவு உற்று நோக்கினால் ஒன்று புரிகின்றது. அரசியல் அரசியல். நவீன அரசியல் தவிர வேறு எதுவும் இல்லை.

அலுவலகச்சூழலில் இது இப்போது பழக்கப்பட்ட ஒன்றாகிப்போய்விட்டது. எவ்வளவு அந்நியொன்னியம் காட்டிப்பழகும் சக ஊழியர் மீதும் ஓரத்தில் ஓர் சந்தேகம் இருப்பதை தவிர்க்க முடியாதளவு அரசியல் சூழ்ந்துள்ளது. தோளில் கை போட்டுக்கொண்டு முதுகின் பின் கத்தி வைத்துக்கோண்டிருக்கும் அபாயகரமான மனிதர்கள் இப்போது அதிகரித்து விட்டார்கள். அதற்கு அலுவலகத்தினை பொறுத்தவரையில் முக்கிய காரணம், மேலிடத்திற்கோ, அல்லது தனது மேலாளரிடமோ இருப்பை நிலை நிறுத்துவதற்காக இருக்கும்

அனேகமாக அலுவலக அரசியல் நடத்துவோர் தன் மீதான நம்பிக்கை குறைந்தவர்களாக, மற்றவன் தன்னை முந்திவிடுவானோ எனப் பயந்தவர்களாகவே இருக்கின்றனர். அதோடு, தான் எதிரி என்ற் கருதுவோரை நேரடியாக எதிர் கொள்ளும் துணிச்சல் அற்ற நபர்களாகவும் இருக்கின்றனர். இதுதான் மிக அபாயகரமான ஒரு விடயம். எதிரி யார் எனத்தெரியாமல் யாரிடம் போய் மோதுவது? கூடச்சிரித்து சிரித்துப்பேசும் அலுவலக நண்பர்தான் நமது எதிரி என்றால் நம்புவது கஸ்டமாகத்தான் இருக்கும் ஆனால் அதுதான் உண்மையாக கூட இருக்கலாம்.

எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள் மூலமே இதை நான் பதிகின்றேன்.
அலுவலக அரசியலை எவ்வாரு இன்ங்காண்பது என்பது தொடர்பில் நான் பட்டுத்தேர்ந்த சிலவற்றை உங்களுடன் பகிர்கின்றேன்.

எப்போதும் நம்மை சுற்றி ஒரு இறுக்கமான அரண் ஒன்றினை இட்டுக்கொள்ள வேண்டும். அதற்காக அலுவலகத்தினுள் முறைத்துக்கொண்டு திரிய வேண்டிய அவசியமில்லை. எதை எதை நமக்குள் அனுமதிக்கலாம் என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும். மற்றவர்கள் அதில் தலையிட அனுமதிக்க கூடாது.

அலுவலக நட்புக்கள் மற்றும் உறவுகளை நமது தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து கொஞ்சம் தூரத்தில் வைப்பது நல்லது. இரண்டையும் கலந்து விட்டால், நம்மை கவிழ்க்க காத்திருக்கும் நண்பர்களுக்கு (??) பல தகவல்கள் கிடைக்கலாம்.

ரொம்ப நட்பாக தன்னை காட்டிக்கொள்ள முனையும் அலுவலக நண்பர்களினை கொஞ்சம் அச்சத்துடன் நோக்கினால் நலம். உள் குத்து ஏதாவது இருக்கா என முழிச்சிருந்து ஆராய வேண்டும்.

எனது பலவீனம் இதுதான் என நாம் காட்டிவிடுவது அலுவலக அரசியல்வாதிகளுக்கு நம்மை கவிழ்க்கும் வேலையினை இன்னும் இலகுவாக்கிவிடும்.

உதவிகள் கோரும் போது, கொஞ்சம் நிதானித்து கேட்க வேண்டிய ஆளிடம் கேட்கின்றோமா? என்பதிஅ தீர்மானித்து பின்,கேட்கலாம். வேலையோடு தொடர்பான உதவிகள் தவிர்ந்த தனிப்பட்ட உதவிகளினை கேட்கும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

நமது மேலாளர்களோ எஜமானர்களோ எம்மீது வைத்திருக்கும் அபிப்பிராயத்தினை ஒரளவாவது அற்ந்து கொள்ளுவது எமக்கு பலமாக இருக்கும். அதற்கேற்ப எம்மை மேலும் புதுப்பித்துக்கொள்ளலாம். அதோடு அவர்கள் மீதான , வேலை மீதான விருப்பினை அடிக்கடி வெளிப்படுத்துவது இன்னும் சிறப்பு.

எனக்குத்தெரிஞ்சது நான் பட்டறிந்தது இவைகள்தான். அதோட, உங்களுக்கு எதிரா ஒரு அரசியல் போய்க்கொண்டிருக்கின்றது தெரிந்தால், சுதாரித்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு நோ அகிம்சை. நம்மளும் முழு நேர அரசியல்வாதியாகி விட வேண்டியதுதான்!!!!!!! பின்ன நமக்கு மகாத்மா பட்டம் வாங்கவா ஆசை? அப்புடி இருந்தாலும் தந்துடுவானுகளா என்ன??? கச்சைய இறுக்கி கட்டிக்கி கோதாவுல குதிங்க பாஸ்!!!!!!!!!!!!