Saturday, August 18, 2012

விஜய் டீவியின் ஜூனியர் சுப்பர் சிங்கர் : முன்தீர்மானங்களுடன் நகர்கின்றதா? ( எனது பார்வையில் )

அழுதுவடிக்கும் சீரியல் கொடுமைகளை தாண்டி விஜய் டீவி வேறுபட்ட பல நிகழ்ச்சிகளை தருவதால் அதன் நிகழ்ச்சிகளில் எப்போதும் பரீட்சயம் உண்டு. முக்கியமாக – ஜூனியர் சுப்பர் சிங்கர் மற்றும் நீயா நானா?

இரு நிகழ்ச்சிகளும் முன்பிருந்ததை விட தற்போது வேறுபாதையில் செல்வது போல இதன் நெடுங்கால பார்வையாளர்களுக்கு தோன்றக்கூடிய சாத்தியங்கள் இப்போது தென்பட ஆரம்பித்துள்ளன. அத்லும் சுப்பர் சிங்கர் ஜூனியர் 3  ன் நிகழ்வுகள் அந்நிகழ்ச்சி மீதான எனது தனிப்பட்ட பற்றினை குறைத்துக் கொண்டே வருவதாக படுகின்றது. இது என்னைப் போன்ற பலரின் கருத்தாகவும் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

டொப் 10 போட்டியாளர்கள் தற்போது  7 ஆக குறைந்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு முறையும் வெளியேற்றப்படுகின்ற போட்டியாளர்கள் இருப்பவர்களை விட சிறப்பாக பாடக் கூடியவர்கள் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

  • -          ஆஜித்
  • -          ரக்சிதா
  • -          செபி
  • -          அகிலேஷ் போன்ற
நல்ல திறமை உள்ள குழந்தைகள் தட்டிக்கழிக்கப்பட்டு யாரோ ஒருவருக்காக இப்போது இந்நிகழ்ச்சி கொண்டு செல்லப்படுவதாக எண்ணத் தோன்றுகின்றது.

ஆஜித் – அந்த சிறுவன் பாடுவது மட்டுமல்ல அவனது ஸ்டைல் அங்க சைஅவுகள் என அனித்தும் ரசிக்கும் படி இருக்கும். தனிப்பட்ட வகையில் எனக்கு மிக பிடித்த இவன் நடுவர்களால் போட்டியிலிருந்து வெளியாற்றப்பட்டதற்கு காரணம் பாடல் வரிகள் மற்ந்து போனதே!  பாடுகின்ற திறமை என்பது குரல்வளம், மற்றும் இன்ன பிற சங்கீதத்துடன் தொடர்பான சமாச்சாரங்கள்தானே அதில் மனனமும் வருகின்றதா? என்ற கேள்வி, இவனது வெளியேற்றத்தின் போது எனக்குள் எழுந்தது. அதேவேளை, பாடும் போது வரி மறந்து மூச்சுவிட்டு பாடிய அஞ்சனா இன்னும் போட்டியில்! ஆஜித்தின் “போ நீ போ..” பாடல் இன்னும் இந்நிகழ்ச்சியில் ஒரு மகுடம். ஆனால் அவன் இன்று போட்டியில் இல்லை!




அதே போல ரக்சிதா! சிறப்பாக பாடிய சிறுமி. இன்று போட்டியில் இல்லை. சொல்லப்படுகின்ற காரணம் ½ மார்க் கம்மியாம்! டொப் 10 க்குள் வரக் கூடிய அனைத்து திறமையும் தகுதியும் இருந்தும் செபிக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. தட்டையாக பாடிக்கொண்டிருக்கும் கவுதம் உள்ளே வர அனுமதிக்கப்பட்டார். கௌதத்துடன் ஒப்பிடும் போது ஆஜித் எவ்வளவோ திறமைசாலி!

அகிலேஷ் – மேடைக் கூச்சமற்ற சிறுவன். அவனது பாடல்களில் தெரிகின்ற உற்சாகம் வேறு யார் பாடும் போதும் வருவதில்லை. அவன் வெளியேற்றப்பட்டமைக்கும் நடுவர்கள் எதையோ காரணமாக சப்பைக் கட்டு கட்டினர்.

இப்போது உள்ள போட்டியாளர்களில், நடுவர்களின் அருள் பார்வை எப்போதும் ஒருவரை நோக்கியே இருக்கின்றது. அது பிரகதி.  அவருக்கு சாக்லேட் அடைமழையாக பொழிகின்றது. அதோடு மட்டும் நின்றுவிடாமல் பாராட்டு மழை. அப்ப்ப்ப்ப்ப்ப்பா!!  நடுவர்கள் - அவரை மட்டும் பாராட்டுவதோடு நிற்காமல் அவரது அம்மாவையும் பாராட்டி தள்ளுகின்றார்கள். இது பார்ப்பதற்கும் கொஞ்சம் வித்தியாசமாக தெரிகின்றது, சுப்பர் சிங்கரில் மற்ற குழந்தைகள் பிரதான நிகழ்ச்சிக்கு வருமுன்னர் பல்வேறு தடகளை தாண்ட வேண்டி இருக்க, இவர் மட்டும் திடீரென சுப்பர் சிங்கருக்குள் முளைத்தார். அதாவது எந்தவித முதற்கட்ட சோதனைகளும் இன்றி.. அன்றிலிருந்து இன்று வரை இவருக்கான இடத்தினை நடுவர்கள் எப்போதும் உறுதிப்படுத்திக் கொண்டே வருகின்றனர், இது நடுவர்கள் மட்டுமன்றி இந்த நிகழ்ச்சி மீதான நடுநிலையினைப் பற்றிய கேள்வியிஅனி எழுப்புகின்றது. இவருக்கு மட்டுமான முன்னுரிமைக்கு என்ன காரணம்? நடுவர்கள் வாய்கிழிய புகழும் அளவிற்கு இவரிடம் பாடும் திறமை உள்ளதா??

தற்போது உள்ளதில் யாழினி மற்றும் சுகன்யாவுடன் ஜெயந்த் ஆகியோர் இறுதிச்சுற்று வரை செல்லும் தகுதியுடன் தெரிகின்றனர். ஆனாலும் யாழினியின் திறமைகள் நடுவர்களால் முற்றுமுழுதாக அங்கீகரிக்கப்படவில்லையோ என்ற எண்ணம் அவர்களின் கருத்துக்கள், அடிக்கடி அந்த்க்குழந்தை டேஞ்சர் சோனுக்குள் வருவதை வைத்து எண்ண தோன்றுகின்றது.

இப்போது இந்நிகழ்ச்சி – முன்மொழியப்பட்ட யாரோ ஒருவருக்கு ஜூனியர் சுப்பர் சிங்கர் பட்டத்தினை கொடுக்க நடாத்தப்படுகின்ற ஒரு செட்டப் கேம் போலவே எனது பார்வைக்கு படுகின்றது.



No comments: