Tuesday, June 30, 2009



நீ இல்லா உலகில் பிரவேசிக்கவென....
நீல ஆடையில் உன் வருகை எங்கும் வியாபகமாயிற்று.
நான் உருகி உன் பாதங்களின் கீழ் வடிந்தோடுகின்றேன்.
என் முத்தங்கள்,
உன் அத்வைதங்களில் மிதக்க..
நீ இன்னும் பரவுகிறாய்- என் ஆன்மாவின் இடுக்கெங்கும்..


அதிகாலை அலாரத்தில் எழுகின்றேன்.
சலனமற்றுக் கிடக்கின்றன
நீ பற்றிய என் ஞாபகங்களும் பிறவும்..


படுக்கை விரிப்பினை மடித்துவிட்டு தயாராகின்றேன்.
நீ இல்லா உலகில் பிரவேசிக்கவென.

No comments: