Monday, June 22, 2009



என் தனிமை பற்றிய புகார்கள்

இன்றும் தொடங்கிற்று
இதயத்தின் கூக்குரல்..
என் தனிமை பற்றி புகார் செய்யவென..

யாரும் இல்லா ஒரு வெளியில்.
நான் தொடர்ந்து வசிக்க,
ஓர் இலையின் உதிர்விலும்
என்னுள் திணுக்கிடல்கள்..

கைகோர்த்துச்செல்லும் ஜோடிகளின் மீதான
என் தனிமையின் சாபங்கள்
இன்னும் என் தெருக்களில் இறைந்து கிடக்கின்றன.

தொலைதூர அழைப்புகளில் மட்டும்
ஓடி ஒளிந்து கொள்ளும் என் தனிமைகள்...
மீண்டும் பல்லிளித்தவாறு
என்னிடம் தொற்றிக்கொள்ள..
அதனை சுமந்தே திரிகின்றேன்
ஒரு பொதி ...போல

No comments: