Monday, September 27, 2010

பாழடைந்த வீடுகள்






பாழடைந்த வீடுகள் பற்றி எப்போதும் என்னுள் ஒரு திகில் உண்டு..
சிறு வயதில் கூடி விளையாடும் காலங்களில்,
சில் வண்டுகள் கத்தும் அப்பாழ்வீடுகள் பற்றி,
நிறைய கதைகள் உலவும் எம்மைச்சுற்றி..
பேய்கள் எனவும், கொள்ளிவாய்கள் எனவும்.

இப்போதெல்லாம்,
விரிசல் விட்டு வாய் பிளந்து நிற்கும் அப்பாழ்வீடுகளின்
சுவர்களினூடு ஓர் நிசப்தம் எப்போதும் கசிகின்ற உணர்வு..
திடீரென பிடரியில் அறையும் திகிலுடன் அவ்விடம் விட்டு நகர.
என்றோ
சிரிப்பொலிகளுடனும்,
வழிய வழிய கனவுகளுடனும்
வாழ்ந்தழிந்த முகமறியா மனிதர்கள் பற்றிய நினைவுகள் ஓடி மறைய,
எதுவென்று கூற முடியா உணர்வுகளோடு,நகர்ந்து செல்கின்றேன்
இன்னும் சில்வண்டுகள் என்னுள் சத்தமிட்டவாறே ..



No comments: