Saturday, August 21, 2010

தனிமையின் இரைச்சல்கள்

தனிமைகள் நீண்டு செல்கின்றன
எதிலும் ஒட்டாத மௌன்ங்களுடன்
தொலைதூர இரைச்சல்கள் போல
என்னுள் எதுவோ இரைந்து கொண்டே இருக்கின்றது.
அது - என் தனிமையின் போரோ??
எதோடு போரிடுகின்றது?
இல்லாத நட்பின் மீதா!
இறந்த காதலின் பேரிலா?
எதுவென்று புரியவில்லை
இருந்தும், மௌனமாக
அவ்விரைச்சலினை சுமந்தே திரிகின்றேன்.
இறக்கி வைக்கும் இடம் தெரியாமல்………………..


2 comments:

ராஜவம்சம் said...

nice.

vetha (kovaikkavi) said...

அவ்விரைச்சலினை சுமந்தே திரிகின்றேன்.
இறக்கி வைக்கும் இடம் தெரியாமல்………………..
All are doing like this.....
Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com