Monday, August 09, 2010

காக்கைகளுக்கு இப்போது வேலை இல்லை


அப்போதெல்லாம் அப்பாவின் கடிதங்கள் பற்றி
அம்மா
காக்கைகளிடம்தான் முறையிடுவாள்.
வேலிகளில் அமர்ந்தவாறு,
தலையினை சாய்த்து
அது கரைய தொடங்கும் அக்கணம்
அவளின் முகம் பிரகாசிக்கும் – ஏதோ சங்கீதம் கேட்ட மாதிரி
அவளின் எதிர்பார்ப்பு அனேகமாய் வீணாகாது
அடுத்த நாள் தபால்காரன் மணியடிப்பான்.
அப்பாவின் கடிதத்தோடு…

காலம் மாறி உலகு சுருங்க,
காக்கைகளுக்கு வேலை இல்லை.
அவைகள் பற்றி அம்மாக்கள் அலட்டுவதுமில்லை.




No comments: