Wednesday, October 13, 2010

உனக்கும் எனக்குமான தூரங்கள்


உனக்கும் எனக்குமான தூரங்கள்
ஓர் திரைக்கப்பால் ஒளிந்துள்ளன
மௌனங்களாகவும், அழுகைகளாகவும்,
திரைவிலக்கும் தருணங்கள் பற்றி
எப்போதும் நாம் பேசிக்கொள்கின்றோம்.
ஆனாலும்,
முடிவென்னவோ -, அவற்றின் கனதிகளை அதிகமாக்கவே..
நிபந்தனைகள் மீது நீ சத்தியம் செய்து சொல்
நீ தயாரா?
நம் திரைவிலக்க???

1 comment:

Unknown said...

அற்புதமான கவிதை ...
வாழ்த்துக்கள் !!