Thursday, June 02, 2011

கனவுகள் உண்டு வாழும் ஒரு பித்தனாகி .............

ன் 
உடைந்த குரலினை கேட்கையில் பறந்துவிடுகின்றன
என் சில தீர்மானங்களும் கோபங்களும்.
வார்த்தைகள் உறைய,
ஒரு முறை என்னையே தட்டிக்கொள்வேன் – நான்தானா என..
சொல்ல நினைப்பவைகள் மறந்து,
உளறல் மட்டும் என் பாஷையாகிப் போகும்,ரம்யங்கள்
எப்போதும் நம் சந்திப்புக்களில் நிகழ்ந்தேறிவிடுகின்றது.
உனக்கும் எனக்குமான காதலின் ஜீவன்
ஏதோ ஓர் மூலையில் கூத்தாட,
காதல் முற்றி,
கனவுகள் உண்டு வாழும்
ஒரு பித்தனாகி
வாழ்க்கை ஓட்டுகின்றேன் – உன் தயவினால்




2 comments:

Ashwin-WIN said...

எங்கேயும் காதல். ம்

vetha (kovaikkavi) said...

காதல் முற்றி,
கனவுகள் உண்டு வாழும்
ஒரு பித்தனாகி
nallavati...i like this
vetha.Elangathilakam.
http;//kovaikkavi.wordpress.com