தூரமாய்
மிதந்தபடி அது செல்ல,
எதுவோ
என்னை உந்தியது – பற்றிப் பிடி என,
கால்களின்
வலு இறக்கும் வரை ஓடினேன்.
தூரங்கள்
சமாந்தரமாக,
எனக்கு
அதற்குமான பயணங்கள் –
எப்போதும்
அடையா இலக்காகிப் போனது.
ஒன்னுமில்ல! கொஞ்ச நாளாவே ஒரு ஆசை, நமக்கென்னு ஏன் ஒரு www.
வாங்க கூடாது என.. இடைக்கிடை ப்ளாக்கரின் பக்கம் போகும் போதும், உன் பெயரிலேயெ .கொம்
உன்௶உ வாங்கிக்கிறியா வாங்கிகிறியா ன்னு கேட்டுக்கிட்டே ஆசைய கிளறிவிட்டுக் கொண்டே
இருந்தது. வாங்குவோமா ன்னு யோசித்தால், யாரோ தூர நின்னு கை கொட்டி சிரிக்கின்ற சத்தம்..
“ ஹா,,,ஹா இவுரு பெரிய பதிவரு, சொந்தமா டொமைன் வாங்குறாராமில்ல,” ன்னு கைகொட்டி சிரிக்கின்ற
சத்தம்.. ஆனானப்பட்ட பிரபல பதிவர்களே சும்மா இருக்கும் போது ஒனக்கு எதற்கு இதெல்லாம்
என்று ஒரு குரல் விடாமல் ஒலித்துக் கொண்டுதானிருக்கின்றது.
சத்தியமாங்க, சில
வேளைகளில் இப்பிடி யோசிக்க தோணும், ச்சா!!! இவனுக்கு மட்டும் ஒரு குத்து ஒன்னு போடலாம்னா
சூப்பரா இருக்கும் என்டு.. ஆனா, கால சூழல் வர்த்தமானங்கள் (அது மட்டுமா – பாடி கண்டிஷனும்தான்….
பப்ளிக்!! பப்ளிக்!! ) அனுமதிப்பதில்லையே என்ன செய்வது?? கற்பனையிலேயே குத்திக் கொள்ள
வேண்டியதுதான். இதோ என் குத்து ஹிட் லிஸ்ட்..
வள வள ன்னு எந்நேரமும் கத்தி கதைத்துக் கொண்டே
இருப்பவர்களுக்கு – யப்பா!!!!!!! முடியலடா சாமி, பக்கத்தில இருப்பவனுக்கிட்டயும் கத்தியே
கதைச்சுக்கொண்டு, இருப்பவனையும் கடுப்பேத்தி, மத்தவங்களுக்கு தொந்தரவா இருக்குமே எங்கிற
பொதுப்புத்தி கூட இல்லாமல் கத்திக் கொண்டே இருப்பானுங்க..ஓங்கி ஒன்னு விடலாமா என்டு
தோணும்.. எங்க ஆபிசில ஒரு மலையாளி இருக்கான், அவன் போடுற சத்தம் பக்கத்து பில்டிங்க்ல
வெடிப்பு விழுகிற அளவில இருக்கும்.. அதுவும் ரெலிபோன் எடுத்தான் என்டா, நான் வேலைய
விட்டுட்டு வேற ஆணி புடுங்க போயிடுவேன். அதிலும் இங்க்லீஸ்!!!!!! பாவம் அது… எப்பவாவது
ஓங்கி ஒன்னு விடுற வாய்ப்பு வராதா என ஏங்கிக்கிருக்கு உள்ளம்!! நடக்காது. இருந்தும்
ஒரு நப்பாசைதான்!! டேய் உங்க வாய்க்கு வாதம் வராதாடா????