Thursday, May 21, 2009

கொண்டாடப்படும் மரணங்கள்
இன்று உலகெங்கும் இலங்கையின் போர் பற்றியும் விடுதலைப்புலிகள் மற்றும் அவர்கள் தொடர்பான முரண்பட்ட கருத்துக்கள் அதிலும் பிர்பாகரன் தொடர்பான கருத்துக்கள் அவரின் மரணம், அது நோக்கப்படுகின்ற முறைகள் தொடர்பாக ஏதாவது சொல்லவேண்டும் போல் தோன்றியதால் இதனைப்பதிக்கின்றேன்.

இன்று இலங்கையில் அரசு தேசிய விடுமுறை அறிவித்துள்ளது. காரணம் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். அதனை கொண்டாட மக்களிற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது போலவே என் பார்வையில் இது படுகின்றது. உண்மையில் ப்புலிகள் மீதுள்ள பிழைகள் களங்கங்கள் அனைத்தினையும் ஒதுக்கி விட்டு சாதாரண மனித நேயமுள்ள ஒரு மனிதன் என்ற வகையில் இதனை எப்படி எடுத்துக்கொள்வது என்பதில் நான் குழம்பியே நிற்கின்றேன்.


அங்கீகரிக்கக்கூடிய காரணங்களின் நிமித்தம் தனது சமூகத்தின் விடுதலை தொடர்பில் அக்கறை கொண்ட ஒரு விடுதலைக்குழுவின் அழிவு இன்னொரு பக்கத்திற்கு கொண்டாட்டமாக மாறுகின்றது என்கிற போது, எங்கே இருந்து இம்மனநிலை உண்டாகின்றது? அவ்வியக்கத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்வினாலா? அல்லது அச்சமூகத்தினை வெற்றி கொண்டு விட்டோம் என்கின்ற மனநிலையா? புலிகள் என்ர தனிப்பட்ட இயக்கம் கொண்டிருந்த உரிமைப்போராட்டம் தொடர்பில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை. ஏனெனில் அது காலத்தின் கட்டாயமாகவே இருந்துள்ளது. ஆனாலும் அதற்கான அவர்களின் வழிமுறைகளில் இருந்த சில அசௌகரியங்கள் புலிகள் தொடர்பானதும் அவர்கள் இலக்கு தொடர்பானதுமான திசைதிருப்பல்களினை இலகுப்டுத்திச்சென்றுள்ளன என்பது எனது தனிப்பட்ட க்ருத்து. அந்த வகையில் நோக்க்குகின்ற போது, இக்கொண்டாட்டங்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த வழிமுறைகளிற்கான பதில் என்றே கொள்ளலாம்.

இருந்தும் பெரும்பான்மை இனத்தவர்களின் மனநிலை இதனோடு நின்றதாக தெரியவில்லை. அவர்கள் தமிழ் சமூகத்தினை வெற்றி கொண்டதாகவே கருதுகின்றனர் என்பதும் தற்போது கொழும்பு போன்ற நகர்களில் தமிழர்கள் மீது சிறிது சிறிதாக நடைபெறும் அத்துமீறல்களும் சான்று பகர்கின்ரன. இது மலினப்பட்டுப்போன ஒரு அரசியலின் மாற்று வடிவம் என்றே கருத இடமுள்ளது.

No comments: