Thursday, May 21, 2009

என்னை வெறும் கோப்பையாக்கிவிடு"


என்னை வெறும் கோப்பையாக்கிவிடு"
வெறும் கோப்பையாக
விடிகின்றன
என் காலைகள்

ஓர்
மெல்லிய பறவையின்,
சிறகசைப்பின் சுகம் போல,
எல்லாக் காலைகளையும்
உணர்கின்றேன்.
காலைகளின் காலம்
இறந்து போக......

வெறும் கோப்பை கூட என்னவாயிற்று?
மனசு வழிய குப்பைகள்,
உணர்வுகளின் அழுக்குகள்,
ஓர் விரக்தி,
பல கவலைகள்,
இன்னும் சில ஞாபகங்கள்.
என எதுவெல்லாமோ......

இரவுகள்...
மனசின் மீது
அவஸ்தைகளை அடுக்கிப் போக...
திணறுகின்ற மனசு..
பாவம்!

ஏதும் புரிவதில்லை.
வெறுமையாகிப்போன வானமொன்றில்
ஒற்றையாய் கூவிச்செல்லும்.....
பறவை ஒன்றின் உணர்வு.
இன்னும் நெளிகின்றேன்.
எதுவென்று புரியாமல்.
ஆனாலும்

அடுத்த காலையின்
பிரசவிப்புக்காய்
என்
இரவுகள் ஒவ்வொன்றும்,
"என்னை வெறும் கோப்பையாக்கிவிடு"
என்ற பிரார்த்தனையுடனே
முடிகின்றது.

No comments: