Thursday, May 21, 2009


யாருக்காக யார் சண்டையிடுவது?
அழகான சண்டைகள்
உனக்காகவே படைக்கப்பட்டன.

காரணங்கள் கூற முடியா,
ஆனாலும் சண்டை இடுவாய்.
செல்லமாக முறைத்து..,
அரை நொடி பேசாமலிருந்து..,
யாரும் காணா தருணங்களில் மெல்ல தட்டி..,
எந்நேரமும் சண்டையிடுவாய்.

அழகான மாலைப்பொழுதுகளில்,
உன் கேசம் அலையாக மாறும் அத்தருணங்களில்
நீ இட்ட சண்டைகள்-
என் சவக்குழியிலும் ஜீவித்திருக்கும்.
காலங்கள் மாற, காட்சிகள் மாற

நீ அன்று
அடுத்தவளிடம் கதைத்ததற்காக இட்ட
அச்சண்டைகளினை இன்று நினைக்கின்றேன்.

ஆனாலும்,

இன்று நிஜம் என்னைப் பார்த்து சிரிக்க,
யாருக்காக யார் சண்டையிடுவது?
அடிக்கடி ஒடி வந்து ஒட்டிக்கொள்கிறது
இக்கேள்வி மட்டும்..
உனக்கும் அப்படித்தானா?
__________________

No comments: