Thursday, May 21, 2009





என்றும் போல்,
இன்றும் எனது காலைகள் ஜீவிதமற்று விடிந்தது.
இன்னும் நான் வாழ்கின்றேன்-
உனக்காகவும், உனது வாழ்க்கைக்காகவும்.....

எப்போது என்னில் ஒட்டிக்கொண்டாய்?
காலம் பொய்த்த என் வெளிகளில்,
இன்றோடு நீயும் இணைந்து ஓர் யுகம் முடிந்தது.
எதைப்பெற்றாய் என்னிலிருந்து?
கொஞ்சம் மகிழ்வினையும்
நிறைய கண்ணீரினையும் தவிர.......

எனக்காக நீ கூறலாம்..
என் உலகம் நீதான் என.
ஆனாலும்,
நான் நம்புவதற்கில்லை பெண்ணே..
நீ உன் உலகினை ஒளித்து வைத்துள்ளாய்..
என் நிழலில் குடியிருக்கெவென.

No comments: