Thursday, May 21, 2009


நீ சென்றுவிட்டாய்.
கருமைகள் வழியும்
ஓர் இரவில் என் கனவுகள் அரங்கேறின..
நீ சென்றுவிட்டாய்.
உண்மையில் நீ சென்றுவிட்டாய்..
தனிமையில் கூவும் குயில் கூட,
என் தனிமையினை பறைசாற்றுகின்றது.
நீ சென்றுவிட்டாய்..
அடிமனசினை இறுக கவ்வும்
மாலைப்பொழுதொன்றில்
நீ பிரிந்து சென்றாய்.
அதன் பின்னான பொழுதுகளில்..
மாலைப்பொழுதுகளிற்கு அஞ்சுகின்றேன் பெண்ணே..
அவை உன் ஞாபகங்களினை கொணர்வதால்.
உன் பாடல்கள் கூட என்னிடம் உள்ளன.
ஓர் அனாதைக் குழந்தை போல..
நீ சென்றுவிட்டாய்.
இன்னும் என் இரவுகள் முடியவில்லை..
ஒளியினை கொண்டு சென்ற-
நீ தூங்கு..
நான் எப்போதும் போல்
உன் பாடல்களுடன் காலம் தள்ளுகின்றேன்

No comments: