Sunday, November 14, 2010

இனித்த பெருநாட்கள்



இன்னும் பசுமைகள் நிறைந்தே உள்ளன
பெருநாட்களின் நினைவுகளில்,
அதிகாலை தொடங்கும் குளியலுடன்,
தொட்டுத்தொட்டே தேய்ந்த புத்தாடைகள் சரசரக்க
மருதாணிக் கைகளுடன் அம்மா தரும் பட்சணங்கள் பெருநாளை வாசமாக்கும்.
புதிய பத்து ரூபாய் நோட்டொன்று அப்பாவிடமிருந்து
அடுத்த கணம் முதல் உலகில் நாந்தான் பணக்காரன்.
ஊதல்கள் தேடி, துபாக்கிகள் தேடி கடைத்தெருக்களில் கால்கள் அலையும்
கூடவே பத்து ரூபாயின் பெருமை சொல்லி..
பகல் உணவு – மகிழ்வுடனும் வீட்டுச்சேவல் பிரிந்த சோகத்துடனும் முடிய
மாமா வீடு தேடி ஓடுவோம் – இன்னொரு பத்து
இறுதியில் அதுவும் சர்பத், சாக்லேட் என முடிந்து போக…
கைகள் வெறுமையாக மனசு வழியும் மகிழ்வோடு, 
மறுநாள் பாடசாலை செல்வோம் பை நிறைய பெருநாள் கதைகளோடு..


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள்!!

7 comments:

ஸாதிகா said...

மலரும் நினைவுகளை இரத்தின சுருக்கமாக பகிர்ந்தது நன்றாக இருந்தது.உங்களுக்கும் எனது ஈதுல் அல்ஹா பெருநாள்வாழ்த்துக்கள்.

Admin said...

நன்றிகள் சகோதரி...

Muruganandan M.K. said...

சுகமான நினைவுகள்.

Admin said...

நன்றிகள் முருகானந்தன் சார்.. இனிய பெருநாள் வாழ்த்துக்கள்

Unknown said...

அரபா நோன்பு சிறக்க வாழ்த்துக்கள்.
பெருநாள் வாழ்த்துக்கள்.

அஸ்மா said...

பெருநாளின் பால்ய நினைவுகள் அருமை! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

Admin said...

பாரத் மற்றும் அஸ்மா ஆகியோருக்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும்..

தொடர்ந்து வாருங்கள்