Sunday, November 21, 2010

அம்பானியின் ஆடம்பர மாளிகை

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஸ் அம்பானி. தனக்கென ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 27 மாடிகளினை கொண்ட ஆடம்பர மாளிகையினை கட்டி முடித்துள்ளார். வரலாற்றில் தனிநபர் ஒருவர் கட்டிய அதிக செலவு மிக்க வாசஸ்தலம் இதுதானாம் ( ம்ம்….. ) அவரது குடும்பத்தில் உள்ள ஆறு பேர் வசிப்பதற்கான இவ்வீட்டினை கட்டி முடிக்க 7 ஆண்டுகள் எடுத்துள்ளன.

சாதாரண கட்டிடங்களினை பொறுத்தவரையில் 60 மாடிகளினை கட்டக்கூடிய உயரம் கொண்ட்தாக இம்மாளிகை இருந்தாலும், கூரைகளிஅனி உயர்த்தி 27 மாட்கள் கொண்டதாக இது கட்டுப்பட்டுள்ளது. மொத்த பரப்பு 37,000 சதுர மீற்றர்கள் !!!

ஒவ்வொரு அறைகளும் பிரத்தியேகமான  அலங்காரம் மற்றும் வசதிகளுடன் காணப்படுகின்றனவாம். 9 லிப்ட்கள்  மற்றும், உடற்பயிற்சிக்கூடங்கள் விருந்தினர் அறைகள் என அனைத்து வசதிகளும் உள்ளதோடு, முதல் மூன்று மாடிகளும் கார்கள் நிறுத்தி வைப்பதற்கான வசதிகளை கொண்டுள்ளதோடு, மேல்தளம் மூன்று உலங்கு வானூர்திகள் தரை இறங்குவதற்கான தளத்தினை கொண்ட்தாகவும் இருக்கின்றது.

அதோடு, அம்பானி மற்றும் அவரது மனைவி மூன்று குழந்தைகள் அதோடு அவரது தாயர் ஆகிய அறுவருக்கும் பணிக்கென இப்புதிய மாளிகையில் 600 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் சொல்கின்றன.

ம்ம்ம்…. பல்லிருக்கிறவன் பக்கோடா திங்கான்.. நமக்கென்ன????















1 comment:

போளூர் தயாநிதி said...

பள்ளிருக்கிரவன் பக்கோடா தின்னட்டும்னு விட்டுட நாம் அம்மா சாமி பிச்ச போடுங்க தர்மமா போகும் . ன்னு சொல்லி பிச்ச எடுக்க வேண்டியதுதான் .
இந்த கேடு கெட்ட மனிதர்களை மக்களே தண்டிக்கும் படி செய்ய வழி செய்யணும்
போளுரன்