Monday, January 10, 2011

ச்சும்மா தோணிச்சு...அதான்!!!!!!!!!!!!!

வார்த்தைகள் வழுக்கிச் செல்கின்றன
எதிலாவது ஒட்டிக்கொள்ள கட்டளையிட்டும்..
துயரத்தின் வழிகளில் எப்போதும் போல்

*******

இறுதிக்கணங்கள் எப்போதும் சுவாரசியமானவை
உன் தொலைபேசி அழைப்பிலும்,
முத்தமொன்றின் அவசரத்திலும்
ஏன் மௌனங்களின் இறுதி கூட,
என் மரணம் பற்றிய கனவும் அதுவாகவே சபிக்கப்படட்டும்..

********

உன்னை துதிப்பதில்லை எனும் முடிவு பற்றி
நான் பிரகடனம் செய்த மறுகணம்-
நீ தொடர்ந்தாய்
துதிப்பது உன் கடமை என்பதை ஞாபகமூட்ட..


3 comments:

தர்ஷன் said...

:)

Jana said...

இது சும்மா தோணி வருவதாக தெரியவில்லையே??? அத்தனை அனுபவங்கள்????

Admin said...

நன்றி தர்ஷன்

எப்படி ஜனா அண்ணா?? சரி சரி.. கண்டுக்காதீங்க.. நமக்குள்ளே இருக்கட்டும்...