Sunday, January 16, 2011

இம்புட்டு வெகுளியாவா இருந்திருக்கோம்!!!!!!!!!!!

காலம் என்பது எபோதும் எதையாவது கற்றுத்தந்து கொண்டே இருக்கின்றது இல்லையா?  அதுவும் கடந்து போன வாழ்க்கையினை திரும்பிபார்க்கின்ற போது, மேலே உள்ள டயலாக் பாதிக்கு மேல் நம்மக்களுக்கு வந்திருக்கும். ஒத்துக்கிறீங்களா? “அனுபவம் என்பது வழுக்கை விழுந்த பின் கிடைக்கும் சீப்பு மாதிரி” என்னு யாரோ ஒரு பெரிசு சொன்னது எத்தின உண்மை.

மனிசனோட மனிசனா பழக - எத்தின முகமூடி தேவை அதுவும் எந்த இடத்துக்கு எந்த முகமூடி, முன்ன உள்ளவன் என்ன முகமூடியோட இருக்கான். அவனோட எண்ணம் என்ன ஏன் அவன் அதைப்பற்றி சொல்றான். அவன் கதைப்பது நெசமா…………………….ஐயோ!! ஐயோ!!!! முடியலடா சாமி.. இதுக்குள்ள இம்புட்டு மேட்டர் இருக்கா என்னு நெனச்சா மலைப்பா இருக்கு. ஆனா அந்த கெரகமும் இப்பதான் நம்ம மண்டைக்கு ஒறைக்குது.

இம்புட்டு நாளா, நாம நெனைக்கிற மாதிரித்தான் நம்ம கூட இருப்பவங்களும் நெனைப்பாங்க.. நாம எத நெனைச்சு சொல்றோமோ அத அவங்களும் புரிஞ்ச்சிப்பாங்க… எல்லாரும் நல்லவய்ங்கதான் என்னுதான் காலம் தள்ளியிருக்கம்.. என்னா ஒரு வெகுளித்தனம்………யப்பா!!!!!!! அப்ப, நமக்கு எது நடந்தாலும், அது என்னவோ போகட்டும்னு லூஸ்ல வீட்டுர்ரது. இது ஏன் நடக்குது? காரணம் என்னா என்னு ஆராய்ற அளவுக்கு புத்தி பத்தல. ஏன்னு புரியல, திடீரென இப்ப கண்ண முழிச்சா, ஒரே களவாணிப்பய சவகாசமால்ல இருக்கு.

பொறவு, எல்லாத்தையும் ரீவைன்டு போட்டா, மேட்டர் வேற! அட! ஆமாங்க, நாமதான் லேட்டு. எதுக்கு களவாணி ஆவுறதுல. அம்புட்டு பய புள்ளைகளும் பீ ஹெச் டி லெவல்ல இருக்கானுவோ.. ஆத்தாடி.. இருங்கடா இதோ எழும்பிட்டன் வர்ரன்!!!!!!!!!!!!!!

( டிஸ்கி : இதற்கும் பதிவுலகுக்கும் எந்த லிங்கும் இல்ல மக்கா....இது கதையல்ல நெசம் ஆனா இங்க இல்ல)


2 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வடை எனக்கே.....

தர்ஷன் said...

உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே