Thursday, April 22, 2010

நிமிடங்கள் கழியும் நீயின்றி...


மௌனங்கள்
என் வாழ்வாகிப்போன-
ஓர் நாளில்,
நீ என்னில் நீங்கிப்போனாய்.
அன்றுதான்,
மழை எனக்காக அழுதது.
காலம் பொய்த்த ஒரு வெளியில்
நான் குடியிருக்கலானேன்.

நீ அறிவாயா?
இன்னு நான் உன் ஞாபகங்களில் சீவிக்கின்றேன்...
உன்னோடான நிமிடங்களின் பெறுமதி
என்னைத் தவிர யார் அறிவார் கண்மணி?

உன் அருகிலான என் இருப்புகளில்,
உன் புத்தாடை வாசனை இன்றும் உண்டு..
எங்கேயோ, யாரிடமோ..
ஆனால் நீ இல்லை,

ஒவ்வொன்றும் பொய்த்துப் போகும்
ஒரு கணத்தினை மாற்றுவாய்
மெல்லிய முறுவல் செய்து....
என் அடுத்த மேசைக்காரியும் அப்படித்தான்
ஆனால் அவள் நீயில்லை..

நிமிடங்கள் கழியும்
நீயின்றி...
ஆனாலும், நினைவுகள் அகலாது கணப்பொழுதேனும்
__________________

No comments: