Tuesday, April 20, 2010

நீ எனும் விசம் தின்றே உயிர் வாழ்கின்றேன்.

உன்னிடம் சொல்லாத வார்த்தைகள்
என் அறை முழுதும் அலைகின்றன..
என் காதலினை சபித்தவாறே..

நீ அறியாய்..
உன் அஸ்திரங்களால் மௌனியாகிப்போன
என்னை துன்புறுத்தும்
அவ்வார்த்தைகள் பற்றி நீ அறியாய்.

நீண்ட ஒரு மாலையில்
என்னோடு வானும் அழ….
நீ சொன்ன வார்த்தைகள்
இன்னும்
என்னையும்
என் காதலினையும் தூக்கிலிட்டுக்கொண்டே இருக்கின்றன.

உனக்காக
சேமித்த என் காதலினையும்
செதுக்கிய என் வார்த்தைகளினையும்
ஓர் நொடியில் அழித்தே சென்றாய்..

ஆனாலும்,பெண்ணே ,
இன்னும் நான்
நீ எனும் விசம் தின்றே உயிர் வாழ்கின்றேன்.
__________________

No comments: