Thursday, April 22, 2010

எது தந்தால் என் உலகில் குடியிருப்பாய் பெண்ணே


இன்னும் தொடமுடியாத ஒன்றில்
உனக்கான இருப்பிடங்களினை –
ஏன் அமைத்துக்கொண்டாய்?
என் பின் தொடர்தல்களின் தப்பிதங்களாலா?

நீ சொல்,
என் காதலின் உறுதி பற்றி.
உன் பொய்களில் இன்னும் நான் மயங்குகின்றேன்
அது தெரிந்தும் கூட..
என் ஆன்மாவில் ஒழுகும் உன் நினைவுகளில்
இன்னும் நீ நனைவதிலிருந்து ஒதுங்கிக்கொள்கிறாய்

உன் பார்வைகளுக்கு மண்டியிட
நான் இன்னும் தயாராகத்தான்..
ஆனாலும் உன் இருப்புக்கள்
என் உலகம் தாண்டியே என்றும்.

எது தந்தால் என் உலகில் குடியிருப்பாய் பெண்ணே?
எதை வேண்டுமானாலும் கேட்டுப்பெற்றுக்கொள்
உன் காதலைத்தவிர…….
__________________

No comments: