Thursday, April 22, 2010

முன்னாள் காதலிக்கு...

முன்னாள் காதலிக்கு...

மழை பொழியும் ஓர் அதிகாலையில், ஏனோ உன் ஞாபகத்தொல்லைகள். அதனால் எழுதித்தொலைக்கின்றேன். ஆனாலும் உனக்கொன்றும் ஆகப்பொவதில்லை. ஏனெனில் எனக்கும் உனக்குமான இடைவெளிகள் கடல் கடந்து போய்விட்டன.

நலமா காதலி?

நலமாய்த்தான் இருப்பாய். மனசு தின்று வாழுமுனக்கென்ன குறை? காலம் எங்கோ சென்றுவிட்டது.
உனக்கு ஞாபகமாஅ இது போன்ற ஓர் மழை நாளில்தான் உன் காதலை கூறினாய். அழகான அக்கொன்றை மரம் இன்றும் அன்று போல் பூத்திருக்கின்றது. அதற்கென்ன... உன்னை போல் என்னை போல் எத்தனை காதலை கண்டிருக்கும்.
நீண்டு செல்லும் தார்ச்சாலைகளில் நான் செல்லும் வரை கண்கள் பூக்க நான் வரும் வரை நீ இருக்கும் அம்மாலைகள் அழகானவை. அதற்காகவே பிந்தும் என் தந்திரங்கள் தெரிந்து நீ காட்டும் பொய் கோபங்களை இன்னும் நான் சேமித்து வைத்திருக்கின்றேன்.
நீ எதை சேமித்து வைத்திருப்பாய்? எனக்குத்தெரியும் உன் எத்தனக்கள் யாவும் என் எதிர்த் திசையில்தான்.

பரவாயில்லை.. நீ என்றும் நலமாய்த்தான் இருப்பாய். இன்னும் ஒன்று எனக்கு ஞாபகம் வருகின்றது. தயவு செய்து உன் குழந்தைக்கு என் பெயரை வைத்து விடாதே. ஏன் எனில் உன் தவறுகள் என்னோடு மட்டும் போகட்டும்.
__________________

No comments: