Friday, October 28, 2011

வேலாயுதம் ; சிறுகுறிப்புகள்



இப்பதான் வேலாயுதம் பார்த்திட்டு வந்தேன், ச்சும்மா தோணிச்சு ஒரு சிறு குறிப்பு, மக்கள்ஸ் இது விமர்சனம் இல்லை..

  • வழமையான விஜய்..
  •  
  • ஹன்சிகா ஆஆஆ…. ரொம்ப தான் கிளுகிளுப்பா இருந்துச்ச்சுப்பா.. இடைக்கிடை தொப்பை ஆடும் போதுதான் கொஞ்சம் நெருடலா இருந்துச்சு, இருந்தும் ஓக்கே!!!!!!
  •  
  • ஜெனிலியா, இதில்தான் பொண்ணுக்கு லூசு கேரக்டர் இல்லைன்னு நெனக்கிறேன்.
  •  
  • காமெடி பட்டாளம்- சந்தானம் சூப்பர். அதிலும் , அந்த மயக்கமா கலக்கமா பாட்டுக்கு சந்தானம் கொடுக்கும் ரியாக்ஸன் சூப்ப்பர்ப்..
  •  
  • சரண்யா, பொண்ணு தொடர்ந்து தங்கச்சியாவே பீல்ட்டில் நிலைச்சிடுமோன்னு கவலையா இருக்கு. கண்ணு, ஹீரோயினாயிடு, ரசிகர் மன்றத்த நான் பார்த்துக்கிறேன்.
  •  
  • அம்மாவை பார்க்க சொல்லி தங்கச்சிய கண்ணாடியில காட்டுறது. துணிஞ்ச கதை.. யப்ப்ப்ப்ப்ப்பா… ரொம்ப அலுத்திடுச்சுப்பா. இன்னும் எத்தனை தமிழ் படத்துக்கு பார்க்கிறது.
  •  
  • கடைசியா விஜய் கொடுக்கிற லெக்ஸர் ரொம்ப அலட்டல்டா சாமி, அவர் தொடங்ககுள்ளேயே மக்கள்ஸ் எல்லாம் எழும்ப ரெடியாயிட்டாங்க.
  •  
  • நான் கடவுள் வில்லன் ( பேர் என்னாப்பா ) , மத்த வில்லன் என அல்லா வில்லனுகளும் விஜயிடம் அடி வாங்கியே சாகின்றானுகள், ஆனா ஏனோ தெரியல மத்த அடியாட்களை எல்லாம் ஒரே குத்தில் சாகடிக்கும் ஹீரோ மெயின் வில்லனுகளை அடித்தே கொல்லுகின்றார்.

  • மோசடிக்காசை ஏதோ கடையில் பிஸ்கட் வாங்குவது போல ஏமாந்த மக்களுக்கு திருப்பி கொடுக்கிறார்.
  •  
  • எப்பவும் போல  முஸ்லிம் தீவிரவாதி. மினிஸ்டரையே ஆட்டி வைக்கும் தீவிரவாதி, விஜயிடம் கடைசியில் வெட்டுப்பட்டு சாகின்றார்.



கடைசியா படம் முடிஞ்சு வெளியே வரும்போது வந்த டவுட்டு ; நாட்டை தீவிரவாதியிடமிருந்து காப்பாற்றும் பொறுப்பை விஜயகாந்திடமிருந்து விஜய் பொறுப்பேற்றிருக்காரா?????????????


டவுட்டினை கன்பர்ம் பண்ண அடுத்த தளபதி படம் வரை காத்திருக்கும்
தல ரசிகன்



No comments: