Wednesday, July 21, 2010

வார்த்தைகள் பறக்கின்றன.

வார்த்தைகள் பறக்கின்றன.
தூக்கம் கலைந்த ஒரு மாலையில்
என் பேனாக்கள் திறக்கப்பட்டதும்
அவை பறக்கின்றன
ஒரு பட்டாம் பூச்சி போல,
இல்லை.. இல்லை..
ஒரு இலையான் போல..

அயர்ச்சி கவ்வும் அம்மாலையில்
படுக்கையில் முகம் புதைக்கும் ஒர் தருணத்தில்
மீண்டும்
அவை பறக்கின்றன
இப்போது அவை கொசுக்களாக மாறி..




No comments: