Sunday, July 25, 2010

என் கனவுகளும் எதிர்காலமும்

அதோ அம்மலைகளின் பின்
என் கனவுகள் உள்ளன என எதிர்காலத்திடம் சொன்னேன்.
நீண்ட ஒரு சிரிப்பொலியுடன் அது என்னை கடந்து சென்றது.
கோபம் தலைக்கேற,
தீர்க்கமாக என் கைகளினை நீட்டினேன் - அம்மலையினை நோக்கி
இப்போது மௌனம்,
பின்,
சிறிய கேவலுடன் அது பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தது.
எதுவும் சொல்லத்தோன்றாமல்,
அவ்வழுகையின் பிற்பாடு கூட
இன்னும் என் கை அத்திசையினை நோக்கியே நீண்டவாறு உள்ளது.



No comments: