Wednesday, July 28, 2010

ஆனந்த விகடன் நியூஸ்பேப்பர் டெய்லி வருதா இல்ல வாரத்துக்கா?

அழகான ஒரு பாடலை ஒரு செவிடனிடம் சொன்னால் எப்படி இருக்கும். அப்படியான அனுபவங்கள் இருக்கின்றதா உங்களிற்கு. எனக்கு சில வேளைகளில் ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் வேடிக்கையாகவும் பல தடவைகள் வலி தருபவையாகவும் அவை இருக்கும்.

சில விடயங்கள் அங்கீகரிக்கப்படும் போது, அல்லது நாம் இதை யாரிடமாவது பகிர வேண்டுமே என துடிக்கும் போது, உரிய ஆள் எமக்கு கிடைக்க வேண்டும். இல்லை என்றால், நான் மேற்சொன்னதுதான் நடக்கும். நான் ரசித்துக்கேட்ட ஒரு பாடல் பற்றி நான் பகிர வேண்டும் என்றால், அதே ரசனையுடன் உள்ள ஒருவர் இருக்க வேண்டும். இல்லை என்றால், அது அந்தச்செவிடன் கதி போலத்தான்.

அண்மையில் எனது பதிவுகளில் ஒன்று யூத்புல் விகடனின் , குட் பிளாக்ஸ் ஆக வந்திருந்தது. எனக்கு தலைகால் புரியாத சந்தோசம், அது எனது எழுத்துக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம் மாதிரி எனக்கிருந்தது. யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல் அப்போது என்னை புரட்டிப்போட்டுக்கொண்டிருந்தது. நண்பனுக்கு தொலைபேசினேன்.

“ஹலோ!!” இது நான்.

“ஆ.. மச்சான் சொல்றா”

மேட்டர விடுவம்.
இருக்கிறாதுல கொஞ்சம் எழுத்து, வாசிப்பு எண்டு கதைக்கிறாது இவன் மட்டும்தான் என்பதால் இவனிடம் பகிர்ந்தால்தான் நன்றாக இருக்கும் என்பது என் கணிப்பு.

“ மச்சான் என் ப்ளாக், யூத் புல் விகடனில் குட் ப்ளாக் பேஜ் ல வந்திருக்குடா!!!!!!!!!!”

……………….” கொஞ்ச நேரம் மறுமுனையில் சத்தம் எதுவுமில்லை.

புரியவில்லையா அவனுக்கு. என்ற என் சந்தேகத்தை அவன் உறுதிப்படுத்தினான்.

“என்ன ப்ளாக்?” அதுசரி

“ உன்னிடம் அன்று காட்டினேனே, நான் எழுதுற அந்த .” என்று முடிப்பதற்குள்,

“ஓ உண்ட வெப்சைட்..” என்றான். எதையோ கண்டுபிடித்த குதுகலத்தில் வெப்பேJ, ப்ளாக் வித்தியாசம் தெரியாதவனா நீயீ என கூவல் சத்தம் கேட்டது..
ஆஹா .. நானாத்தான் வந்து மாட்டிக்கிட்டேனா.. என்று எனக்குள்ளெ சொல்லிகொண்டேன்.

“ஆமா.. அதுதான்..” என்றேன்.

“சரி. அதுக்கென்னடா இப்ப?”

“ இல்ல அதுல எழுதின ஒரு ஆட்டிகல், யூத்புல் விகடன் சைட் ல வந்திருக்கு” என இழுத்தேன் ஒர் சுரத்தில்லாமல்.

“யூத் புல் விகடனா..! அதென்னது, வெப்சைட்டா??”

எனக்கு வாய் விட்டு அலறவேண்டும் போல இருந்தது.

“அது ஆனந்த விகடண்ட வெப்சைட்..” என்றேன் வேண்டா வெறுப்பாக..

“ஆனந்த விகடன்…” என்று இழுத்தவன், தொடர்ந்து, “ அந்த நியூஸ் பேப்பர்(!!???) இப்ப டெய்லி வருதா இல்ல கிழமைக்கு ஒண்டா” என்று போட்டானே ஒரு போடு..

“மச்சான் அப்ப நான் பிறகு எடுக்கன்..” என்று அவனது பதிலையும் எதிர்பாராமல் தொலைபேசியினை வைத்துவிட்டேன். 
இனி இவனிடம், நமீதா நயந்தாரா , அசீன் தாண்டி வேறு எதுவும் கதைப்பதில்லை என்ற தீர்மானத்தோடு..

2 comments:

Robin said...

//“ஆனந்த விகடன்…” என்று இழுத்தவன், தொடர்ந்து, “ அந்த நியூஸ் பேப்பர்(!!???) இப்ப டெய்லி வருதா இல்ல கிழமைக்கு ஒண்டா” என்று போட்டானே ஒரு போடு..// :)

வாழ்த்துகள்!

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள்!