Tuesday, July 13, 2010

கனவு லோகத்திலிருந்து – நிஜ உலகு வரை

திடீரென இப்படி ஒரு சக்தி எங்கிருந்து வந்தது என நான் அறியேன். அட எல்லோரும் நான் இடும் ஆணைக்கு அடிபணிகின்றார்கள்..

அட இலங்கையில் என்னை தவிர எதுவும் பெரிதாக பேசப்படவில்லை.. ஜனாதிபதி என்னை சந்திக்க வெண்டும் என கோரிய அனுமதிக்கடிதம் அப்படியே என் மேசையில் கிடக்கின்றது. எப்போ அப்பொய்ண்ட்மெண்ட் கொடுக்கலாம் என யோசித்துக்கொண்டே, வரட்டும், இந்த முறை ஆளுக்கு நல்லா டோஸ் விடனும், எவ்வளவு நாளா இந்தப்பிரச்சினைகள் இழுத்துக்கொண்டே போறார். என்ன நினைச்சுக்கு இருக்காங்க.. வரட்டும் என எண்ணிக்கொண்டேன்.

பக்கத்தில் திரும்பினால், அட! அஜ்மல்.. என்னோடு ஐந்தாம் ஆண்டு வரை ஒன்றாய் படித்தவன்.. இவன் எங்கே இங்கே?? இவ்வளவு நாளும் எங்கிருந்தான். பல சிந்தனைகள் ஓடுவதற்குள், நாங்கள் முன்பு விளையாடும் பக்கத்து வீட்டு பாழ் வளவுக்குள் கிரிக்கட் மட்ச் நடக்கின்றது. வழமை போலவே அவன்- சக்கி அழுகுணி ஆட்டம் ஆடுகின்றான். பந்தை எடுத்துக்கொண்டு ஓட ஆரம்பிக்கும் அவனை துரத்துகின்றேன். அவன் ஒரு வீட்டிற்குள் நுழைய, நானும் நுழைகின்றேன். ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டிருப்பது- அவளல்லவா?????????? இவள் எங்கே இங்கே? எதோ ஒன்று தொண்டையில் அடைக்க.. அவளைப்பார்க்க வேண்டாம் என திரும்பும் போது, அம்மா அழைக்கும் சத்தம்.. விளயாட கொஞ்சமும் விட மாட்டா என்று அலுத்தவாறே…. “ ஓ வாறன்.. “ என குரல் கொடுத்துக்கொண்டே ஓடுகின்றேன்.

ஓ வாறாயா? எழும்புடா எரும.. நேரம் ஆறரை.. ஆகுது .. கனவா?.. அடியேய் பிந்தினாய் எண்டா.. அந்த அரபி உரிச்சு தொங்க விடுவான்.. ஓடு.. ஓடு..” என்ற குரல் அசரீரி மாதிரி.. எங்கோ கேட்ட குரல்… திடீரென முன்னால் அறை நண்பன். என்ன நடக்குது இங்கே??????? அட கனவா!!!!!!!!!!

“என்ன கடும் கனவு போல” என்றவனுக்கு , ஒன்றும் கூறாமல் மழுப்பலாக சிரித்துக்கொண்டே… நிஜ உலகில் போராட கிளம்பி விட்டேன்

ஆனாலும், அக்கனவு- இன்னும் உள்ளே இறங்கிக்கொண்டே இருக்கின்றது…………..

1 comment:

Prasanna said...

மனசு பாருங்க.. எப்படியெல்லாம் ஆட்டம் காட்டுதுன்னு :)