Sunday, June 20, 2010

மீண்டும் தொடங்கிற்று

உன் ஞாபகக் காயங்கள் ஆறிப்போகும் காலங்களில்
ஓர் இலையான் போல
உன் தொலைபேசி அழைப்புகள்
என் மனசின் காயங்களை சுரண்ட..


மீண்டும் தொடங்கிற்று
மறதிக்கும் உன் ஞாபகங்களிற்குமிடையிலான சண்டை.


என்றோ மறந்த,
உன் புன்னகைகள்
உன் முத்தங்கள்
அடிக்கடி சந்திக்கும் அப்பூமரம்
கல்லூரி வாசிகசாலை
என எல்லாம்
தூசு தட்டப்படுகின்றன.
உன் அழைப்பினால்.


முடிகின்ற உறவில்
இன்னும் நீ முற்றுப்புள்ளி இடவில்லையா?
அழுது கொண்டு
நீ சொன்ன ஓர் மழை நாள் கூட
இன்று போல் உள்ளது.

1 comment:

பனித்துளி சங்கர் said...

ஆஹா மிகவும் அருமையான வார்த்தை தொடுப்பு . பகிர்வுக்கு நன்றி