Friday, May 21, 2010

வாழ்க்கை : கொஞ்சம் மாற்றி யோசியுங்கள்

வாழ்க்கை : கொஞ்சம் மாற்றி யோசியுங்கள்

அவன் வாழ வழியற்ற குருடன் ஒருவன். தன் வயிற்றினை கழுவிக்கொள்ள தெருவில் உட்கார்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான் அருகில் , “நான் குருடன் உதவி செய்யுங்கள்” என்று ஒரு பலகை. முன்னால் கொஞ்சம் நாணயங்கள் அவனது திருவோட்டினுள் சிதறிக்கிடந்தன. இலக்கின்றி அவன் பார்வை எங்கோ வெறிச்சிட்டு நின்றது. நிச்சயமாக அவனக்கு கிடைத்துள்ள அந்நாணயங்கள் அவனது ஒரு வேளை உணவுக்கும் போதாது என்பதை அவன் அறிவானோ என்னவோ??
 
உலகம் வெகு வேகமாக இயங்கிகொண்டிருந்தது. எந்திரம் போல மக்கள் இயங்கிக்கொண்டிருந்தனர். அவ் ஏழை குருடனை நின்று கவனிக்க யாருமில்லை. இருந்தும் ஒருசில விட்டெறிந்த சில்லறைகள்தான் அவனைச்சுற்றிக்கிடந்தன.

அப்போது அதுவழியே வந்த ஒரு பெரியவர், நின்று, சில்லறைகள் சிலவற்றினை இடும்போது அவன் அருகில் இருந்த பலகையினை நோக்கினார். அதை எடுத்து வேறு எதுவோ கிறுக்கிவிட்டு இருந்த இடத்தில் வைத்துவிட்டு அவர் சென்றுவிட்டார். யாரோ தன் அருகிலிருக்கும் பலகிஅயில் அதுவோ செய்கின்றனர் என்பதை ஒலிக்குறிப்பில் உணர்ந்தாலும் அக்கண்பார்வையற்றவன் எதுவும் கூறவில்லை.
 
என்ன ஆச்சரியம்! சிறிது நேரத்திற்கெல்லாம் அவனது பாத்திரம் நிரம்பிவிட்டது. முன்பு கனிக்காமல் சென்ற மனிதர்கள் இப்போது அவனை நின்று கவனித்து அவனுக்கு ஏதாவது கொடுத்துவிட்டு செல்வதை உணர்ந்தான் அம்மனிதன். அதுவும் இம்மாற்றம் முன்பு யாரோ பலகையில் செய்த மாற்றத்தால் என்பதையும் அவன் உணரத்தவறவில்லை.


அந்தி சாயும் வேளை , அப்பெரியவர் மீண்டும் அவ்விடம் வந்தார். அவரது காலடிச்சத்தத்தில், அவரை அடையாளம் கண்டுகொண்டான் ( ? ). அவரிடம் ஐயா, நீங்கள்தான், என் இயலாமையினை விளம்பரப்படுத்தி நான் வைத்த அறிவிப்பில் ஏதோ செய்தீர்கள் என நினைக்கின்றேன். நீங்கள் செய்த மாற்றத்திற்கு பின்னால் எனக்கு சில்லறைகள் போதுமானதாக கிடைத்துள்ளன என்பதை நான் உணர்கின்றேன், உங்களுக்கு என் நன்றிகள். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை எனக்கு சொல்வீர்களா? என வினவினான்.

சிரித்துக்கொண்டே அப்பெரியவர் சொன்னார். வேறொன்றுமில்லை, நீ
எனக்கு கண் தெரியாது”. என நீ எழுதி வைத்ததை, கொஞ்சம் மாற்றி “ இன்றைய நாள் , மிக அழகானது. ஆனால் எனக்கு பார்க்கும் பாக்கியமில்லை” என மாற்றி எழுதினேன். அவ்வளவுதான் என சொன்னார்.

அவனுக்கு எதுவோ புரிந்தது.


அவன் முன்பு எழுதி வைத்த சேதிக்கும் பின்னர் அப்பெரியவர் மாற்றி எழுதிய செய்திக்கும் இடையில் வித்தியாசம் எதுவும் இல்லை. ஆனாலும் அப்பெரியவர் மாற்றியதில் இன்னும் விடயம் இருந்தது.

அவன் தனக்கும் மட்டும் குருடு என்பதை உலகுக்கு அறிவித்தான். அதில் இருந்த விடயம் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. ஆனால் அப்பெரியவர் மாற்றிய செய்தியில், பிறருக்கும் செய்தி இருந்தது. அவர்கள் இக்குருடனை விட பாக்கியம் பெற்றவர்கள் என்பது உணர்த்தப்பட்டிருந்தது. இதுதான் அவனுக்கு மேலும் பணம் சேர்க்க உதவியது.

புதிது புனைதல் (innovation) புதுமை (Novel) என்பன இருந்தால் வாழ்க்கையில் இன்னும் விரைந்து முன்னேறலாம். மொத்தத்தில் மாற்றி யோசியுங்கள்.


No comments: