Sunday, May 30, 2010

இந்தியா வென்று விட்டது : இனி ரெண்டு நாளைக்கு – முடியல……….


உண்மைதான். இவ்வனுபவத்தினை அனேகமான மத்திய கிழக்கில் பணிபுரியும் நண்பர்கள் பெற்றிருப்பீர்கள் என நம்புகின்றேன்.

நான் பணிபுரியும் அலுவலகத்திலும் இந்திய நண்பர்கள் பலர் பணிபுரிகின்றனர். பெரும்பான்மையான நண்பர்களுக்கு – நட்பு என்பது கிரிக்கட் இல்லாத வேளைகளில் மட்டும் என்பது போல எனக்குத்தோன்றும். இந்தியா தோற்று விட்டால், ஏதோ கப்பல் கவிழ்ந்த மாதிரி மூஞ்சி விடியவே விடியாது.அதிலும் இலங்கையுடன் தோற்று விட்டதா? கிழிஞ்சது போ………… ஏதோ பரம விரோதிய பார்ப்பது போல பார்ப்பர்.

“ டேய் அவன் வெண்டா, தோற்றா நான் என்னடா செய்ற வெண்ண..” என கத்த வேண்டும் போல இருக்கும். ம்ம் .. காலக்கொடுமை.. வேற என்னத்த சொல்ற…
“ஏண்டா இப்பிடி இருக்கீங்க” என பரிதாபப்பட்டுக்கொள்வேன்.

எனது நாட்டினரின் நிலை வேறாக இருக்கும். “ இண்டைக்கு இலங்கை தோற்றுவிட்ட்து” என்றால், என்ன மாட்ச் எங்கே நடக்குது என்பர், இவ்வளதுதான் எம்மவர்களின் கிரிக்கட் பற்றிய ஆர்வம். இதையும் விட மிஞ்சி மிஞ்சிப்போனால் – யார் யார் எத்தனை ரன், விக்கட் எனபன பற்றியுடன் முடிந்து விடும்,

தற்போது நடந்து கொண்டிருக்கும் முக்கோண சுற்றுப்போட்டியின் முதல் போட்டிக்கு அடுத்த நாள் அதாவது நேற்று, எங்கள் அலுவலகம் – ஒரு மரண வீடு போல இருந்தது. எனது இந்திய சக பாடிகள் முகம் விடியவில்லை. சிம்பாவேவுடன் இந்தியா தோற்றுவிட்ட்து. இந்திய வீர்ர்கள் அனைவருக்கும் அர்ச்சனை நடந்து கொண்டிருந்த்து. நான் மனதுக்குள் சிரித்துக்கொண்டேன் ( வெளியே சிரித்தால் உரிச்சு தொங்க விட்டுடுவானுக,,,,) வலிய வந்து என்னிடம் – புது டீம், அதான் தோற்றுச்சு.. சேவாக் இல்ல , டோனி இல்ல அது இது என்று ஆயிரம் விளக்கங்கள். இதுக்கு நான் எதுவுமே கேட்க வில்லை. வேணாண்டா அழுதுடுவன் எங்கிற நிலையில் நான்..

இதோ இன்று, மாதக்கடைசி என்றால் எனது தலை உருளும். மேசையில் இருக்கும் கோப்புக்களினை பார்க்கும் போதே வயிறு கலக்கும். அதற்குள் மூழ்கிப்போயிருக்கும் போது, எனது இன்ரகொம் ஒலித்தது. திரையில் எனது இந்திய நண்பர்களில் ஒருவரின் எண் ஒளிர்ந்த்து.

“ஹலோ” இது நான்

“எப்படி இன்னை மேட்ச்?” என அவர் கேட்கும் போதே உற்சாகம் தெறித்த்து.

இலங்கை தோற்றுவிட்டது என்பது நண்பரின் உற்சாகக் கத்தலிலேயே புரிந்துவிட்டது. இந்தியா ஜெயித்தது என்பதை விட எதிரணி தோற்றுவிட்டது என்பதிலேயே அவர்கள் மகிழ்ச்சி அதிகம் இருப்பதை கண்டு வியந்துள்ளேன்.

“வாழ்த்துக்கள்” என்றேன். நண்பர் விடுவதாக இல்லை. போட்டு அறுத்துக்கொண்டே இருந்தார். கேட்டுக்கொண்டே இருந்தேன். 

வை பிளட் … சேம் பிளட் நிலமை….
ஏண்டா இப்பிடி இருக்கீங்க … விடுங்கடா டேய்….
வேறு என்னத்த சொல்ல….

( நண்பர்கள் இதை பாக்கமாட்டாங்க எங்கிற தைரியத்தில்தால் இதை பதிவேற்றுகின்றேன்.. ஏன்னா அவங்க ஒத்தரும் தமிழர்கள் இல்லை…. ஐ ஜாலி!!!!!)

1 comment:

தோழி said...

உங்கள் நிலை புரிகிறது... :((